விழுப்புரம் அன்பு ஜோதி காப்பகத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் ஈரோடு மாவட்டம், கோபியில் தாலுகா தலைவர் முத்தாயம்மாள் தலைமை யில் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பி.எஸ்.பிரசன்னா, செயலாளர் பா.லலிதா, தீஒமு தாலுகா தலைவர் வி.ஆர்.மாணிக்கம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று அந்தியூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.