உதகை, ஜூலை 25- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உதகை இடை கமிட்டி மாநாடு நடைபெற்று, நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உதகை இடைக்குழு மாநாடு மாவட்ட மைய அலுவலகத்தில் என். பானுமதி தலைமயில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதிரா உரையாற்றி னார். வேலையறிக்கையை செயலாளர் ஆமினா முன்வைத் தார். இதில், சிஐடியு தாலுகா செயலாளர் நவீன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் அடையாள குட்டன், விவ சாயிகள் சங்க தாலுகா தலைவர் கே.ராஜேந்திரன், மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ரெஜினா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சங்கத்தின் உதகை இடைகமிட்டி தலைவ ராக பானுமதி, துணைத்தலைவராக புவனேஷ்வரி, செயலா ளராக ஆமினா, துணைச்செயலாளராக பரிமளா, பொருளா ளராக பிரமிளா உட்பட 11 பேர் கொண்ட இடைகமிட்டி தேர்வு செய்யப்பட்டது. முடிவில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் நன்றி உரையாற்றி னார். சுமித்ரா நன்றி கூறினார்.