மது பிரியர்கள் அத்துமீறல்
கோவை, டிச.5- அன்னூர் பேருந்து நிலையத்தில் மது பிரியர்கள் பயணி கள் அமரும் இடத்தில் மது பாட்டில்களை கையில் வைத்துக் கொண்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால், மது பிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை மாவட்டம், அன்னூர் பேருந்து நிலையம் பகுதி யில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து பேருந்தில் பயணம் சென்று வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு பேருந்துக்காக இங்கு வந்து சென்று வரும் நிலையில் குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அதிக அளவில் பேருந்தில் பயணிக்க வருகின்றனர்.
கோவை மாவட்டம், அன்னூர் பேருந்து நிலையம் பகுதி யில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து பேருந்தில் பயணம் சென்று வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு பேருந்துக்காக இங்கு வந்து சென்று வரும் நிலையில் குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் அதிக அளவில் பேருந்தில் பயணிக்க வருகின்றனர்.
பொதுமக்கள் அதிக அளவு வந்து செல்கின்ற பேருந்து நிலையத்தில் மது பிரியர்களின் இந்த செயல்களால் பெண் கள் பேருந்து நிலையத்திற்கு அச்சத்துடன் வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அன்னூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மது பிரியர்களின் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
விவசாய தோட்டத்தில் மலைபாம்பு மீட்பு
கோபி, டிச.5- கோபி அருகே விவசாய தோட்டத்தில் 6 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பங்களா புதூர் உப்புபள்ளம் பகுதி யில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் விவ சாய தோட்டத்தில் அவரது மனைவி வியாழனன்று கால்நடைகளுக்கு தீவனம் அறுக்க சென்றுள்ளார். அப்போது சோளப்பயிர்க ளின் நடுவே 6 அடி நீள மலை பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் போராடி மலை பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்த னர். விவசாய நிலத்தில் மலைபாம்பு பிடிபட்டது குறித்து அதகாரிகள் தெரி விக்கையில் வனபகுதி யிலிருந்து ஓடைகளின் வழி யாக வந்திருக்கலாம், என்ற னர்.