districts

img

வீடு கோரி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஏஐடியுசி மனு

திருப்பூர், நவ. 20 - திருப்பூரில் தொழிலாளர்களுக்கு வீடு வழங்க கேட்டு  கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐ டியூசி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது.  திங்களன்று ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் மூலம் வீடு வழங்கக் கோரி கடந்த ஜூலை மாதம் சுமார்  1400 பேர் மனு கொடுத்தனர். இதில் 800 மனு எண்ணிக்கை  மட்டும் குறிப்பிட்டு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்  கடிதம் கொடுத்துள்ளது. மீதி மனுக்களுக்கு விபரம் தரப்பட வில்லை. எனவே அதற்கான கடிதம் வழங்க வேண்டும். விண் ணப்பித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.  இந்த நிகழ்வில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர்  பி.ஆர்.நடராஜன், பனியன் சங்கப் பொதுச் செயலாளர் என். சேகர், பொருளாளர் எஸ்.செல்வராஜ், செயலாளர் ஆர்.செந் தில்குமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொ ண்டனர்.