districts

img

ஒரே நாடு, ஒரே தேர்தல்: பாஜக நிர்பந்தத்தால் அதிமுக ஆதரவு - துரை வைகோ பேட்டி

திருப்பூர், ஜன. 16 - ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதற்கு அதி முக ஆதரவளிப்பதற்கு பாஜக நிர்பந்தமே காரணம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய  செயலாளர் துரை வைகோ கூறினார். திருப்பூர் சாமுண்டிபுரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர், மாமன்ற உறுப்பினர் ஆர்.நாகராஜ் தலைமையில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா சமத்துவ பொங்கல் திங்களன்று கொண்டாடப்பட்டது.  இவ்விழாவில் பங்கேற்ற துரை  வைகோ மதிமுக கொடியை ஏற்றி வைத்து, சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் . இந்நிகழ்வின் ஒரு  பகுதியாக சாமுண்டிபுரத்தை சேர்ந்த புது மண தம்பதிகளுக்கு மதிமுக சார்பில் பொங் கல் சீர்வரிசைகளோடு, புத்தகங்களும், மரக் கன்றுகளும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துரை வைகோ செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக கூட திராவிட இயக்கம்தான், ஒரே  நாடு ஒரே தேர்தல் என்ற பாரதிய ஜனதாவின்  முழக்கத்தை அதிமுகவும் ஆதரிக்கிறது. இன்று அதன் நிலை ஏன் இவ்வாறு ஆனது என் பதை அதிமுக கட்சி தலைவர்கள், தொண்டர் கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழகம் மற்றும் தமிழ்நாடு குறித்து ஆளு நர் சர்ச்சை ஏற்படுத்தி வருவது ஆளுநர் சனா தனக் கொள்கைகளோடு செயல்பட்டு வரு வதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந் திருப்பதாக குற்றம் சாட்டினார். கோவை யில் உள்ள ஈஷா தியான மையத்தில் யோகா  பயிற்சிக்குச் சென்ற பெண் மர்மமான முறை யில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசா ரணை நடத்த வேண்டும்.  சமத்துவ பொங்கல்  விழா நிகழ்வுகள் ஒருமைப்பாட்டை பாதுகாக் கின்றன. இதனை தொடர்ந்து மற்ற இயக்கங்க ளும் சமத்துவ பொங்கலை கொண்டாட முன்வர வேண்டும், என்று அவர் கூறினார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் இந்து  முஸ்லிம் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர்.