districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தமிழக முதல்வரின் நடவடிக்கையால் மகிழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி

கோபிசெட்டிபாளையம், அக்.16- கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் ரூ.7 கோடி  மதிப்பீட்டில் கான்கீரிட் சாலைகள் அமைக்க முதல்வர் நிதி  ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என அதிமுக முன் னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் பல் வேறு பணிகளை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினரின் 10  கோரிக்கைகளில் மனு அளித்திருந்தேன். அதனப்படையில் மூன்று கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ளது. அதில் கோபி நகராட்சி பகுதியில் கான்கீரிட் சாலைள் அமைக்க முதல்வர் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், சித்தோடு -  மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவுற்றதும் கோபி எல்லை பகுதியி லிருந்து புறவழிச்சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும். அதற்கான ஆய்வு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார்.

ஜேடர்பாளையம்: இன்று மின்தடை

நாமக்கல், அக்.16- நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் துணை மின்  நிலையத்தில் செவ்வாயன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஜேடர்பாளையம், வடகரை யாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளை யம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கொத்தமங்க லம், கள்ளுக்கடைமேடு, நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தகுட்டை, கருக்கம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று காலை 9  மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக் காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி

கோவை, அக்.16- கோவை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், 3  பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் பேரூராட் சிக்குட்பட்ட குமிட்டிபதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (35). லாரி ஓட்டுநரான இவர் தனது உறவினர்களான ஜெய் குமரே சன் (32), கணேசன் (35), ஹரி (12) ஆகியோருடன் ஒரு காரில் வேலாந்தவளத்தில் இருந்து நாச்சிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த காரை சிவராஜ் ஓட்டினார். வேலந் தாவளம் - நாச்சிபாளையம் சாலையில் உள்ள மாஸ்தி கவுண் டன் பகுதியில் உள்ள வாத்தியார் தோட்டம் அருகே கார் வந்து  கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் குழாய்களை ஏற்றிக்கொண்டு கேரளத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாரத விதமாக அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரை ஓட்டி  வந்த சிவராஜ், ஜெய்குமரேசன், கணேசன் ஆகியோர் சம்பவ இடத்தலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிறுவன் ஹரி மீட்கப்பட்டு அப்பகுதி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். இவ்விபத்து குறித்து தகவலறிந்ததும் அப் பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட னர். இதைத்தொடர்ந்து கே.ஜி.சாவடி போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய நிலையில், கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

ஈரோடு, அக்.16- ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் பரவலாக மழையும் பெய்தும் வருகிறது. இந்நிலையில், சனியன்று ஈரோடு மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறை வாக இருந்தது. இதன்பின் இரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங் கியது. இந்த மழை விட்டு விட்டு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த் தது. மழையின் காரணமாக பல்வேறு இடங் களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை பி.பி. அக்ரஹாரம் பகுதியில் உள்ள பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால் அங் குள்ள தரைமட்ட பாலம் மூழ்கியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும், அங்குள்ள சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பி.பி.அக்ரஹாரம் மல்லி  நகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த வர்கள் பாத்திரம் மூலம் தண்ணீரை இரைத்து  வெளியில் ஊற்றினர். இதேபோல் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்தியா நகர்  வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளை யும் வெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி அதிமுக பிரமுகர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார்

சேலம், அக்.16- அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.15 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட அதி முக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட வர்கள் புகாரளித்துள்ளனர். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதி யைச் சேர்ந்த மாணிக்கம் – அமுதா தம்பதியின் மகன் கவிமணி, மருமகள் சங்கீதா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், மின்சார வாரியத்தில் வேலை வாங்கித்  தருவதாக கூறி அதிமுகவைச் சேர்ந்த வழக் கறிஞர் முரளி கண்ணன் என்பவர், கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னிடம் 19 லட்சம் ரூபாய்  பணம் வாங்கினார். ஆனால், வேலை வாங் கித் தரவில்லை. இதுகுறித்து அவருடன் கேட் டபோது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வந்தார். இதனால், பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, நான்கு லட்சம் ரூபாய்  மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை பிறகு தருவதாக கூறி ஏமாற்றினார். இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நி லையில், மீண்டும் வழக்கறிஞர் முரளி கண் ணனை சந்தித்து மீதித்தொகை ரூ.15 லட் சத்தை கேட்டபோது, பணம் தர முடியாது என மிரட்டல் விடுக்கிறார். இதனால் என்ன செய் வது என்று தெரியாமல் தவித்து வருகி றோம். வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட  முடியாமல் தவித்து வருகிறோம். எனவே,  மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும், என்றார்.

கருவிழி மூலம் பதிவு செய்து ரேசன் பொருட்கள்

அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் சேலம், அக்.16- நியாய விலைக்கடைகளில் கருவிழி மூலம் பதிவு செய்து ரேசன் பொருட்களை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள என உணவுப்பொருள் வழங்கல் துறை  அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள் ளார். சேலம் ஆட்சியரகத்தில் நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலை மையில் பொது விநியோகத் திட்டப் பணி களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட் டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில், அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகை யில், நெற்பயிர் மழையில் நனைவது தடுக்கும் வகையில் நேரடிக் கொள்முதல் நிலைத் திலிருந்து பெறப்படும் நெல் பயிரை உடனடி யாக அரவை நிலையத்திற்கு அனுப்பி, அதனை அரிசியாக மாற்றம் செய்து தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் குடோனுக்கு அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும் பொருட்கள் தரமானதாக  உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்திட ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குழுக்கள்  அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்ட பிறகு  நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படு கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் 376 அரவை நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 700 அரவை நிலையங்களாக விரி வுபடுத்தப்பட்டுள்ளன. நியாய விலைக் கடை களில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் வகை யில் தமிழ்நாட்டில் உள்ள 36 ஆயிரம் நியாய விலைக்கடைகளிலும் இத்திட்டதைச் செயல் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. டெல்டா மாவட்டம் மற்றும் இதர மாவட் டங்களில் ரூ.238 கோடி மதிப்பில் 211  குடோன்கள் அமைக்கப்பட்டு 2.86 லட்சம் மெட் ரிக் டன் அரிசிகள் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த ஆண்டும் 1.20 லட்சம் மெட்ரிக் டன் அரிசி சேமித்து வைப்பதற்காக சுமார் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி கள் நடைபெற்று வருகிறது, என்றார். இக்கூட் டத்தில், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தி பன், சட்டமன்ற உறுப்பினர்கள் ரா.ராஜேந்தி ரன், ரா.அருள், எஸ்.சதாசிவம், மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பொள்ளாச்சி, அக்.16- கோவையை தலைமையிடமாக கொண்டு, பொள்ளாச்சி ரயில் நிலையத்தை உள்ளடக்கி புதிய ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. கோவைமாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில், ஆய்வு செய்ய வந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுக் காக்குழு உறுப்பினர் கே.மகாலிங்கம், கே.ரவி, கே.வெள்ளிங்கிரி ஆகியோர் மனு அளித்த னர். அதில், பொள்ளாச்சியிலிருந்து கோவை  மாநகரத்திற்கு கல்வி மருத்துவம் வேலை கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் கார ணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக் கள் சென்று வருகின்றனர். இதற்காக பொது போக்குவரத்தான பேருந்தை பயன்படுத்து கிறார்கள். ஆனால், பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்று வருவது இன் னும் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும் என் பதே மக்களின் நீண்ட கால கோரிக்கையாக  உள்ளது. ஆகவே பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு சென்றுவர குறைந்தது ஆறு  முறையாவது ரயில் இயக்க வேண்டும்.  அதேபோல் பொள்ளாச்சியிலிருந்து சென்னை சென்றுவர கோவை மார்க்கமாக ரயில் இயக்க  வேண்டும். கேரள துறைமுக நகரமான கொச் சியிலிருந்து தமிழக துறைமுக நகரமான தூத்துக்குடிக்கு தினசரி ரயில் இயக்க வேண் டும். பாலக்காடு முதல் பொள்ளாச்சி வரை இயங்கிய பயணிகள் ரயிலை மீண்டும் துவங்க வேண்டும். பொள்ளாச்சி ரயில் நிலை யத்தை உள்ளடக்கி, கோவையை தலைமை யிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட் டத்தை உருவாக்க வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மங்கலம் காயிதேமில்லத் நகரில்  எம்.பி. நிதியில் உயர்மின்கோபுர விளக்கு

திருப்பூர், அக். 16 - திருப்பூர் அருகே மங்கலம் ஊராட்சி 3ஆவது வார்டு காயி தேமில்லத் நகர் பகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3லட் சத்து 48ஆயிரம் மதிப்பில் உயர்மின் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இடுவாய் ஊராட்சி மன் றத் தலைவர் கே.கணேசன், மங்கலம் ஊராட்சி மன்ற  துணைத்  தலைவர் தாஹா நசீர், திருப்பூர் ஒன்றியக்குழு உறுப்பினர்  ஜானகி எபிசியண்ட் மணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு  உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரேசன் கடை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு எம்எல்ஏ, மேயரை முற்றுகையிட்ட மக்கள்

திருப்பூர், அக். 16 - திருப்பூர் சாமுண்டிபுரம் எம்ஜிஆர் நகரில் உள்ள ரேசன்  கடையை இடமாற்றம் செய்யக் கூடாது, அதே பகுதியில் கடை  செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி  மக்கள் எம்எல்ஏ க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் ஆகி யோரை முற்றுகையிட்டனர். எம்ஜிஆர் நகர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்துவரும் நிலையில், அங்கு செயல்பட்டு வந்த ரேசன்  கடையை சாமுண்டிபுரம் பகுதிக்கு மாற்றியதாகத் தெரிகிறது.  சாமுண்டிபுரம் பகுதியில் ஏற்கெனவே ரேசன் கடைகள் இருக் கும் நிலையில் எம்ஜிஆர் நகர் கடையை இடமாற்றம் செய்யா மல் இங்கேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்  திங்களன்று இப்பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு வருகை தந்த எம்எல்ஏ க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்கு மார் ஆகியோரை முற்றுகையிட்டு மக்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். எம்ஜிஆர் நகருக்கு தனியாக ஒரு கடை  அமைக்கப்படும் என்று எம்எல்ஏ, மேயர் உறுதி அளித்ததை  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்ற னர்.

தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

புதுதில்லி, அக். 16 - அரசியல் கட்சிகள் கணக்கில் காட்டாமல் பல ஆயிரம் ரூபாய் கோடி களை நன்கொடையாக பெறுவதற்கு வழிவகை செய்யும் ‘தேர்தல் பத்திரங்களுக்கு’ எதிரான வழக்குகள், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார். கார்ப்பரேட் பெருமுதலாளிகளிட மிருந்து, கணக்கு வழக்கின்றி, நன் கொடைகளை பெறுவதற்கு தோதாக,  ஒன்றிய பாஜக அரசானது, தேர்தல் பத்திரங்கள் நிதிச் சட்டத்தை, கடந்த  2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி யது. இதற்காக ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திருத்தியது.  தேர்தல் பத்திரங்கள் நிதிச் சட்டத்தை, நிதி மசோதாவாக தாக்கல் செய்து, மாநிலங்களவையின் ஒப்புதல் தேவைப்படாமலேயே மோடி அரசு சட்ட மாக்கியது. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் தேர்தல் நிதி வழங்கு வதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிடும் முறையை கொண்டு வந்தது. அப்போது முதல் தேர்தல் பத்தி ரங்கள் மூலம் நிதி பெறும் கட்சிகளில் பாஜக-வே முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், யார் தருகிறார் கள் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லாமலேயே, இப்போது வரை பல ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 2022 டிசம்பரில் இந்த வழக்குகள் விசார ணைக்கு வந்தபோது, தற்போது தேர்தல் எதுவும் நடைபெறப் போவ தில்லை என்பதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை முடிந்து 2023 ஜனவரி கடைசி வாரத்தில் விசார ணைக்கு எடுத்துக் கொள்வதாக தலை மை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே, இந்த வழக்கு கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார். “பிரச்சனையின் முக்கியத்துவ த்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அர சியலமைப்புச் சட்டத்தின் 145(4) பிரி வின்படி, இந்த விவகாரம் குறைந்த பட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அர சியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும். அக்டோபர் 30 முதல் இந்த வழக்கு விசாரிக்கப்படும்” என்று டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

லாட்டரி அதிபருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வரிமான வரி சோதனை நிறைவு

கோவை, அக்.16- தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை திங்களன்று நிறைவுபெற்றது. கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந் தமான 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த அக்.12 ஆம் தேதி முதல் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை 5 ஆவது நாளாக திங்களன்று காலை வரை நீடித் தது. வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மார்டின் இல்லம் மற் றும் மார்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் கார்ப்பரேட் அலுவலகத் தில் திங்களன்று காலை வரை சோதனை நீடித்தது. மற்ற  இரு இடங்களில் ஏற்கனவே நிறைவடைந்திருந்தது. இந்நிலை யில், திங்களன்று காலை 10.30 மணியுடன் அனைத்து இடங் களிலும் சோதனையானது நிறைவடைந்தது. கார்ப்பரேட் அலு வலகத்தில் இருந்து ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைபற்றி சென்றதாக கூறப்படு கிறது.