ஈரோடு, ஏப். 1- தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கிறது என்ற வயிற்றெரிச்சலில் பாஜக, அதிமுக அவதூறு செய்வ தாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் குற்றம்சாட்டினார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டா லின் ஞாயிறன்று இரவு ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சா ரப் பொதுக் கூட்டத்தில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வ ரன், ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ், கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி ஆகியோருக்கு வாக்கு கேட்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஈரோட்டு மண்ணிற்குத்தான் எத்தனை எத்தனை பெருமைகள். வெள்ளையரை எதிர்த்துப் போர் நடத்திய மாவீரன் தீரன் சின்னமலை மண். தமிழன் என்றோர் இன முண்டு; தனியே அவற்கொரு குண முண்டு” என்று உணர்ச்சிக் கனலை எழுப்பிய நாமக்கல் கவிஞர் இராம லிங்கனார் மண். சேரர்களின் தலை நகராகத் திகழ்ந்த மண். இப்படி ஈரோடு – நாமக்கல் - கரூர் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதி களையும் கொண்ட இந்த மண்ணி லிருந்து, நாடு காக்கும் ஜனநாயகப் போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்திருக்கிறேன். தமிழ்நாடு முன்னேற்றப் பாதை யில் செல்ல ஒவ்வொரு திட்டமாக வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவும்,
பாஜகவும் குறை சொல்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கிறது என்ற வயிற்றெரிச்சலில் அவதூறு செய்கிறார்கள். காலிங்கராயன் வாய்க்காலில் சாயக் கழிவுநீர் கலப்பதை திமுக அரசு தடுத்திருக்கிறது. இப்போது, தெளிவான நீர்ப்பாசனம் பெற்று வருகிறது. தண்ணீர் வருகைக்கு ஏற்ப மூன்று போகம் சாகுபடி செய்கிறார்கள். அதேபோல பவா னிசாகர் அணை, கீழ்ப்பவானி வாய்க்கால் பாசனத் திட்டப் பிரச் சினையும் தீர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்து, அதிமுக ஆட்சியில் முறை யான திட்டமிடல் இல்லாமல், அவ சரகதியில் துவக்கப்பட்ட அத்திக் கடவு அவினாசி நீரேற்று திட்டத் திற்கு தண்ணீர் எடுக்கும் நிலை யம் இருக்கும் பகுதியைக் கையகப் படுத்தாமல் விட்டுவிட்டார்கள். இதனால், ஒட்டுமொத்தத் திட்டத் தையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. நம்முடைய அமைச்சர் முத்துசாமி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் சுமுகமாகப் பேசி நிலத்தைக் கையகப்படுத்தி னார். குழாய்கள் பதிக்கப்பட்டுச் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு, இப்போது தயார் நிலையில் இருக்கிறது. வரும் பருவகாலத் தில் உபரிநீர் வந்தவுடன், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும். ஈரோடு மாவட்டம், பாசூரை யும், நாமக்கல் மாவட்ட சோழிராம ணியையும் இணைக்க இரயில்வே மேம்பாலம். நாமக்கல்லில் சிறப்பு முட்டை ஏற்றுமதி மையம். ஈரோடு ரயில் நிலையம் முதல் காங்கே யம், தாராபுரம், பழனி ரயில் நிலை யம் வரை புதிய அகல ரயில் பாதைத் திட்டம். ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்ப டும். இதேபோன்று, இந்திய ஒன்றி யத்திலும் எல்லாருக்கும் எல்லாம் எனும் ஆட்சி அமையவேண்டும் என்று இந்த வாக்குறுதிளைக் கொடுத்திருக்கிறோம். திடீர் என்று ஒரு இரவில் தொலைக்காட்சியில் தோன்றி, கருப்புப் பணத்தை ஒழிக்க, ஐந் நூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் தடை செய்கிறேன் என்று அறிவித்தார். கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா? சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தானே ஒழிந்தது.
அடுத்து ஜிஎஸ்டி என்ற பெயரில் எல்லா பொருட்கள் மேலும் மிகக் கொடூரமான வரி களைப் போட்டார்கள். பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் எஜமா னர் அல்ல, மக்கள்தான் உங்க ளுக்கு எஜமானர்கள்! நீங்கள் எப்ப டிப்பட்ட தோல்வி பயத்தில் இருக் கிறீர்கள் என்று, சிலிண்டர் விலை யைக் குறைத்ததிலேயே தெரிந்து விட்டதே. இந்த விலைக் குறைப்பு நாடகம் எல்லாம், தங்களின் ஆட்சி யில் நாடு எப்படி சீரழிந்தது என்பதை மறைக்க - மக்களை மறக்க வைக்க பாஜக போடும் திட்டம்! இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு ஜனநாயகத் தைக் காக்கட்டும். “பாசிசமும் மத வாதமும் வீழ்ந்தது. ஜனநாயகமும் சமத்துவமும் சகோதரத்துவமும் வென்றது” என்ற புதிய வரலாறு பெரியார் பிறந்த மண்ணில் இருந்து தொடங்கட்டும் என்றார். அமைச்சர்கள் சு.முத்துசாமி, சாமிநாதன், சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல் விழி செல்வராஜ், மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செய லாளர் ராஜேஷ் குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில், கரூர் மாவட்டச் செய லாளர், திருப்பூர் மாவட்ட செயலா ளர், கொமதேக ஈஸ்வரன் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பி னர் ஈவிகேஎஸ்.இளங்கோ வன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக் கானோர் திரண்டனர்.