districts

img

அதிமுகவின் அலட்சியப்பணி: தரைப்பாலம் சேதம்

கோவை, மே 3- கோவை, நீலகிரி ஆகிய மாவட் டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக் கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட் டில் நான்கு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் புதனன்று இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் படி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப் பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல் நீல கிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம் பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வியா ழனன்று (இன்று) கனமழை எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக பட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சி யஸ் ஆகும். குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸ் இருந்து  வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை புறநகர் பகுதியான கவுண் டம்பாளையம், வடவள்ளி, சின்ன  தடாகம், பன்னிமடை, ஆனைகட்டி, கணுவாய் போன்ற இடங்களில் காலையிலிருந்து வானம் மேக மூட்டத்துடன் மழை பெறும் நிலை யில் இருந்தது. மாலை நேரத்தில் திடீரென்று சூறாவளி காற்றுடன் இரண்டு மணி நேரமாக கனமழை பெய்தது. இதற்கிடையில் மின்சா ரம் துண்டிக்கப்பட்டதால், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகினர்.

அதிமுக அலட்சியம்: தரைப்பாலம் சேதம்

மதுக்கரை சுற்றுவட்டார பகுதி களில் பெய்த தொடர் கனமழை யால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது  மதுக்கரை ஆற்று கோவில் அருகே இருந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும், தரைப்பாலத் தில் உடைப்பு ஏற்பட்டு, குரும்ப பாளையம் செல்லும் தார்ச்சாலை யும் முழுமையாக பெயர்ந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த 2020 அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட தரைப்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால், தரைப் பாலத்தின் கீழ் நீர் செல்ல போதிய வழியை ஏற்படுத்தாமல், கமிசனை  குறிக்கோளாக கொண்டு அவசர கதியில் பணிகள் முடிக்கப்பட்டதே, வெள்ள நீர் வெளியேறி பாலம்  பெயர்ந்து போக காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். இந்நிலையில், மதுக்கரை தரைப் பாலம் மற்றும் சாலை அடித்துச் செல்லப்பட்ட பகுதியில்  மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தரைப்பாலத்திற்கு முன்னதாக தடுப்பணை கட்டவும்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.