districts

img

தேசிய அறிவியல் தினத்தில் வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர், பிப்.28- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழக மாணவர்கள் சார்பில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பொங்கலூரில் உள்ள  பொ.வே.க.நா. மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகை யில்பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது.   திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் உள்ள பொ.வே.க.நா. மேல்நிலைப் பள்ளி யில் தேசிய அறிவியல் தினத்தை கொண்டா டும் வகையிலும், பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பேச்சுப் போட்டி,  கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கவிதைப் போட்டி ஆகிய போட்டிகள் நடத் தப்பட்டன. “வேளாண்மையில் அறிவியல்”  எனும் தலைப்பின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் கள் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை தமிழாசிரியை சித்ரா  ஒருங்கிணைத்தார். மேலும் உதவி தலைமை ஆசிரியர் கார்த்தி கேயன் தலைமையேற்று பேசினார்.  இந்நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக் கழக மாணவர்கள் வேளாண்மையின் முக்கி யத்துவம் மற்றும்  வேளாண்மையில் அறிவி யல் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்ததுடன் மரக்கன்று நடுதல் குறித்த செயல் விளக் கமும் அளித்தனர். இதில்  ஏராளமான மாண வர்கள் பங்கு பெற்று தங்களின் தனித் திறமை களை வெளிப்படுத்தி பரிசுகளைப் பெற்ற னர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு முதல் பரிசாக கொய்யா பழ மரக்  கன்றுகளும் , இரண்டாம் பரிசாக மாதுளை பழ மரக்கன்றுகளும், மூன்றாம் பரிசாக  மகோகனி மரக்கன்றுகளும் வழங்கப்பட் டன.