கோவை, மே 4- கெயில் திட்டத்தால் விவசாய நிலங் கள் பாதிக்கப்படக் கூடாது என விவ சாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ள னர். இதுதொடர்பாக கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச் சாமி, உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து ஆகியோர் செய் தியாளர்களிடம் கூறுகையில், கோவை யில் பல கோடி ரூபாய்மதிப்பில் பல் வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. சாலை விரிவாக்கம், புறவழிச் சாலை, மேம்பால விரிவாக்கம், நொய் யல் சீரமைப்பு, கெயில் குழாய் பதிப்பு, உயர்மின் கோபுரங்கள் அமைத்தல், அன்னூர் நெடுஞ்சாலை, அத்திக் கடவு - அவிநாசி திட்டம், வனவிலங்கு களால் விவசாயத்திற்கு விவசாயிக ளுக்கும் ஏற்படும் ஆபத்துகள் ஆகிய வற்றில் சில திட்டங்கள் மட்டுமே நிறை வேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்களை எல்லாம் நிறைவேற்றும் போது விவ சாய நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்று தமிழக முதல்வர் எச்ச ரித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதா ஆட்சியின்போது, கெயில் திட் டத்தால் விளை நிலங்கள் பாதிக்கக் கூடாது என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதற்கெதிராக கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அப்போது, விவசாயிகள் சம்மதித்தால் மட்டுமே குழாய்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, விவசாய நிலங் களை விட்டுவிட்டு ரயில் பாதைக ளுக்கு அருகே அல்லது நெடுஞ்சாலை கள் வழியே குழாய்களை கொண்டு செல்ல வேண்டும். அல்லது புறம் போக்கு நிலங்களில் குழாய்களை பதிக்க வேண்டும். இத்திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்பட்ட கூடாது. இவ் வாறு அவர்கள் கூறினர்.