சேலம், ஜன.24- நகர்ப்புற வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என வலியு றுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காடை யாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் அனைத்து ஊராட்சி களிலும் வேலை வழங்கப்பட்டு வரு கிறது. அதனைத்தொடர்ந்து நக ராட்சி பகுதிகளிலும், பேரூராட்சி பகு திகளிலும் நூறு நாள் வேலைத் திட் டத்தை விரிவுபடுத்த வேண்டும் என அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தினர் கடந்த 7 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதி யாக தற்போது நகர்ப்புற வேலை திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள் ளது. ஆனால், அறிவித்தபடி யாருக் கும் வேலை வழங்காத சூழலே உள் ளது. எனவே, நகர்ப்புற வேலை திட் டத்தில் வேலை அட்டை வழங்கி அனைவருக்கும் வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தினர் காடையாம்பட்டி பேரூராட்சி அலுவ லகம் முன்பு காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்திற்கு சங்கத்தின் தாலுகா தலை வர் எம்.ஜெயக்கொடி தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, மாவட்ட தலைவர் வீ.தங்கவேல், மாவட்ட துணைத் தலைவர் சின்ன ராஜ், சிபிஎம் தாலுகா செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட திரளான விவ சாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.