ஈரோடு, ஏப். 3- இலவச வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திங்க ளன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அரசு புறம்போக்கில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும். குடியிருக்க இடம் கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் இட மும், பட்டாவும் வழங்க வேண்டும். 100 வேலை திட்டத்தில் 100 நாட்க ளும் வேலை அளிக்க வேண்டும். வேலை நாட்கள் குறையும்பட்சத் தில், வேலையில்லா கால சம்பளம் கொடுக்க வேண்டும். விவசாய தொழி லாளர்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூ தியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட் டத்தில் முன்வைக்கப்பட்டது. வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத் தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, விதொச சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சண்முக வள்ளி தலைமை வகித்தார். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட செயலாளர் பி.பி.பழ னிசாமி வாழ்த்தி உள்ளிட்டோர் உரை யாற்றினர். முடிவில், மாவட்ட பொரு ளாளர் எஸ்.மாணிக்கம் நன்றி கூறி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராள மான விவசாய தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இதில், சிபிஎம் மாவட்ட செயலா ளர் ஆர்.ரகுராமன், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பா.லலிதா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.