districts

img

விவசாயத் தொழிலாளர் சங்க கோரிக்கை வெற்றி

நாமக்கல், செப். 3- நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதி யில் குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்ய வேண்டும் என விதொச தலைமையில் பொதுமக்கள் திரண்டு மனு அளித்த நிலையில், கோரிக்கை ஏற்று சாலை செப்பனிடும் பணி நடை பெற்றது.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத் துள்ள  நாமகிரிப்பேட்டை பேரூராட்சி யில் வெள்ளைகல்பட்டி கிராமம் உள் ளது. இந்த பகுதியில் 10 ஆண்டுக ளுக்கு மேலாக சாலை பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தார் சாலையை பழுது பார்த்து சரி செய்து கொடுக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் வி.பி.சபாபதி தலைமையில் ஏரா ளமான பொதுமக்கள் திரண்டு நாமகி ரிப்பேட்டை  பேரூராட்சி செயல் அலுவ லரிடம் மனு அளித்தனர்.  கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த செயல் அலுவலர், பழுத டைந்த சாலைகளை  நேரில் வந்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இத னைத்தொடர்ந்து, சாலைகளை சரி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், தற்போது சாலை சீரமைக்கும் பணிகள்  நடை பெற்று வருகிறது.  உடனடி நடவடிக்கை எடுத்த நாம கிரிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்திற் கும், விதொசவிற்கும் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ள னர்.