உடுமலை, மார்ச் 5- உடுமலையில் விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. விவசாய பொருட்கள் கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்த ரங்கம் உடுமலை எலையமுத்தூர் பகுதியில் உள்ள ஜெயின் இரிகேசன் விவசாய பண்ணையில் செவ்வாயன்று நடைபெற் றது. இதில், உலகில் மக்கள் தொகை அதிகமாக உள்ள நம் நாட்டில் மக்களுக்கு தேவையான உணவை வழங்க விவ சாயிகள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மனித உயிருக்கு தண்ணீர் முக்கியமாக இருப்பது போல் விவ சாயிகளுக்கும் தண்ணீர் தேவை முக்கியமானதாக உள்ளது. இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் சொட்டுநீர் பாசன முறையை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். அதே வேலையில் மனிதர்களுக்கும், மண் ணுக்கும் தீக்கு ஏற்படாத வகையில் விவசாயம் செய்ய வேண் டும். விவசாயத்தில் லாபம் பெற வேண்டும் என்றால் விளை பொருட்களை புதிய தொழில் நுட்பத்தின்படி மதிப்புக் கூட்டு முறையில் விற்பனை செய்ய வேண்டும். வரும் காலத் தில் நாட்டில் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கும் எனவே அனைவரும் கால நிலைக்கு ஏற்ற வகையில் விவசாயம் செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப் பட்டது. மேலும், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையிலான உபகரணங்கள், வீரிய ரக மா, தென்னை, வாழை கன்றுகள். மேலும், புதிய தொழில் நுட்பத்தில் தண் ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் மற்றும் கரும்பு விவ சாயம் செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் தரப் பட்டது. இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண் டார்கள்.