தருமபுரி, நவ.29- கிராமப்புற வேறு உறுதி திட்டத் தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் வேலை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 4 ஆவது மாநாடு காரி மங்கலம் (டி.எஸ்.ஆர்.மாஹால்) தோழர் வி.ஆறுமுகம் நினைவரங் கத்தில் நடைபெற்றது. விதொச மாவட்ட தலைவர் வி. ரவி மாநாட்டிற்கு தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத் தலைவர் கே.எல்லப்பன் அஞ்சலி தீர்மா னத்தை முன்மொழிந்தார். ஒன்றிய கவுன்சிலரும், வரவேற்பு குழு தலை வருமான வி.உதயக்குமார் வர வேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலத்தலைவர் ஏ.லாசர் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எம்.முத்து வேலை அறிக்கையும், பொருளாளர் இ.கே. முருகன் வரவு-செலவு அறிக்கை யையும் முன்வைத்தனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. அருச்சுணன் பங்கேற்று மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார்.
தீர்மானங்கள்
தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணப் பணிகளை துவக்கி விவசாய தொழி லாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் 100 நாள் வழங்க வேண்டும். இத்திட் டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவு படுத்த வேண்டும். குடிநீர் பிரச்ச னையை தீர்க்க ஒகேனக்கல் குடிநீர் இரண்டாம் கட்ட திட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும். நிலமற்ற விவசாயத் தொழி லாளர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். வீட்டுமனையற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசு வீடு கட்டி தரவேண்டும். ஏழை மக்கள் குடும்பத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்கு மேல் (என்.பி.எச்) என்பதை மாற்றி வறுமை கோட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். அரசு மூலம் பல ஆண்டு களுக்கு முன்பு கட்டிக் கொடுத்த வீடு கள் பழுதடைந்து உள்ளதை புதுப் பித்துக்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த விவ சாய தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்கவேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். என்னேகால் புதூர், தும்பாஅள்ளி, கால்வாய் பணிகளை போர்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்த வேண்டும். கே.ஆர்.பி.அணையிலிருந்து பம்பிங்மூலம் அனைத்து ஏரிகளுக்கும் நீர் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில், மாவட்ட தலைவ ராக கே.கோவிந்தசாமி, மாவட்ட செயலாளராக எம்.முத்து, மாவட்ட பொருளாளராக எம்.சிவா, மாவட்ட துணைத்தலைவர்களாக இ.கே.முருகன், பி.கிருஷ்ணவேணி, சி. ராஜா, மாவட்ட துணைச்செயலாள ராக ஜி.பாண்டியம்மாள், எம்.செல்வம், ஆர்.வெங்கடாச்சலம் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாவட் டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் மாநாட்டை நிறைவு செய்து உரை யாற்றினர். மாவட்டம் முழுவதும் இருந்து திரளான விவசாய தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.