districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வனத்துறையின் வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஏப்.10- ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஸ்பிரபு தலை மையில் வேளாண் குறைதீர் கூட்டம் திங்களன்று ஈரோடு வனக்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் தில், குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில், காட்டு யானை ஒன்று இருசக்கர வாகனங்களில் சென்ற 4 பேர்களை மிதித்து கொன்று விட்டது. இந்த யானையை வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார்கள். இந்த வாக்கு றுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ் சாட்டினர்.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பேசுகையில், கடம்பூர் வனச் சரகத்தில் குன்றி மலை கிராமத்தைச் சேர்ந்த பொம்மேகவு டர், சித்துமரி ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இதன்மீது நட வடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. காட்டு விலங்கு களான யானை, காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்குகளால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு மனு செய்த அனை வருக்கும் காலதாமதம் இல்லாமல் நிவாரணம் வழங்க  வேண் டும் என  வலியுறுத்தப்பட்டது. அதேபோல, தமிழக அரசாங் கம் சிறுதானிய உற்பத்திக்கு ஊக்குவிப்பு செய்வதாக சட்ட மன்றத்தில் அறிவித்தது. இத்திட்டத்தை ஈரோடு மாவட்டத் தில் உள்ள வனப்பகுதியில் செயல்படுத்த வேண்டும். மேலும், சிறுதானியங்களைக் கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. காட்டுப்பன்றிகளைச் சுட கேரள அரசு அனுமதியளித்துள் ளதைப் போல சுடுவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்துரு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய வன அலுவலர், அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளைக் கண்காணித்து வழக்கு போடுவது, போக்குவரத்து துறை சார்ந்த நடவடிக்கைக்கும் ஆவண செய்யப்படும். சோதனைச்சாவடிகளில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வது. இழப்பீடு உரிய காலத்தில் கிடைக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். முன்னதாக இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சத்தி மலை வட்டார செயலாளர் பி.சடைய லிங்கம், பொருளாளர் பி.சடையப்பன், பர்கூர் மலை வட்டார செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மஞ்சள் ஏலம்

தருமபுரி, ஏப்.10- அரூரில் உள்ள தருமபுரி வேளாண் விற்பனை குழு வின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஞாயிறன்று மஞ் சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 60 விவசா யிகள், 350 மஞ்சள் மூட்டை களை கொண்டு வந்திருந்த னர். இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.4,879 முதல் 6,359 வரையும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.4,669 முதல் 5,329 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.12 லட்சத்துக்கு மஞ்சள்  ஏலம் போனதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

போக்சோவில் ஒருவர் கைது

சூலூர், ஏப்.10- சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் தனது வீட்டின்  அருகே உள்ள இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவ னுக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதுகு றித்து பெற்றோர் சிறுவனி டம் கேட்டபோது சூர்யா  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள் ளார். அதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற் றோர் இதுகுறித்து உடனடி யாக சூலூர் காவல் நிலையத் தில் புகாரளித்தனர். அப்புகா ரின் பேரில் போலீசார் விசா ரணை செய்து, சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி கோவை மத் திய சிறையில் அடைத்தனர்.

கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு உடுமலை நகராட்சி எச்சரிக்கை

உடுமலை, ஏப்.10 - கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு உடு மலை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு செய்திருப்பது, தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. உடுமலைப்பேட்டை நகராட்சி நிர்வாகம் அறிக்கையில், உடுமலை நக ராட்சிக்கு சொந்தமான தெருக்களில் தமிழ்நாடு நகராட்சிகள் தொலைக் காட்சி வடங்கள் நிறுவுதல் வரையறை  விதிகள் 2000 இல் திருத்தப்பட்ட விதிக ளின்படி, கேபிள் ஆப்ரேட்டர்களும், தனி யார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்குபவர்களும் நகர்ப் புற உள்ளாட்சிகளுக்கு தள வாடகை  தொகை ஒவ்வொரு வருடமும் கிலோ மீட்டர் அடிப்படையில் செலுத்த வேண் டும். உடனடியாக நகராட்சிக்கு செலுத்த  வேண்டிய கட்டணங்களை செலுத்துமா றும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி  பெற்றிருப்பின் கடிதத்தினை ஒப்படைக் குமாறும் அறிவுறுத்தி உள்ளனர். இது சம்பந்தமான கலந்தாய்வுக் கூட் டம் ஏப்.17 ஆம் தேதியன்று பிற்பகல்  4 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நக ராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே அனைத்து  கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும்  தனியார் தொலை தொடர்பு நிறுவனங் கள், இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் தங்களுடைய சர்வீஸ் ஏரியா விபரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்த தவறும்பட்சத் தில் சம்பந்தப்பட்ட கேபிள்கள் முன் அறி விப்பு ஏதுமின்றி நகராட்சியால் அகற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு தனியார், கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு ஆதரவானதாக உள் ளதாக கேபிள் ஆப்ரேட்டர்கள் ஆட்சே பம் தெரிவித்துள்ளனர்.

பூங்கா ஊழியர்கள் தொடர் போராட்டம் உண்ணாவிரதத்தில் 3 பெண்கள் மயக்கம்

பூங்கா ஊழியர்கள் தொடர் போராட்டம் உண்ணாவிரதத்தில் 3 பெண்கள் மயக்கம் உதகை, ஏப்.10- உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மயக்கம் அடைந் தனர். நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பூங்கா மற்றும் பண்ணைகளில் 900 பேர் பணிபுரிந்து வரு கின்றனர். காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10  அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுட் ளனர். 19 ஆம் நாள் போராட்டமான திங்களன்று சுட்டெரிக்கும் வெயிலில் உண்ணாவிரதத்தில் அமர்ந்திருந்த 3 பெண்கள் திடீரென மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு தலைமை மருத்துவம னைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

யோகாவில் நூதன சாதனை கோவை மழலைகள் அசத்தல்

கோவை, ஏப்.10- 11 வயது சிறுவன் மற்றும் 6 வயது சிறுமி ஆகியோர் இணைந்து யோகாவின் திம்பாசன கலை  மற்றும் கால்களால் முட்டை எடுத்து வைப்பது என இரு வேறு நூதன சாதனை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த னர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் – ரம்யா தம்பதியின் மகள் ரித்விகா (6). இவர் யோகா கலையில் பயிற்சி பெற துவங்கி ஓராண்டில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகளை செய்து அனை வரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தனது 6 வயதிலேயே இளம் சாதனையாளர் விருது பெற்ற இவர் புதிய சாதனை யாக, தனது இரு கால்களை மட்டுமே பயன்படுத்தி ஆறு  முட்டைகளை எடுத்து, சிறிய கோப்பையில் வைத்து சாதனை புரிந்துள்ளார். 12 விநாடிகளில் இவர் செய்த இந்த நூதன  சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித் தது. இதேபோல, அதேபகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் - கௌசல்யா தம்பதியின் மகன் சித்தேஷ். 6 ஆம் வகுப்பு பயின்று வரும் இவர், யோகா கலையில் முக்கிய ஆசனமான திம்பாசனத்தில் நின்றபடி, 30 விநாடிகளில் தரையில் 30 முறை  மார்பை தொட வைத்து எழுந்து அசத்தினார். யோகாவில் மிக அரிதான இந்த கலையை செய்த சிறுவன் சித்தேஷ், கின்னஸ்  உலக சாதனை புரிந்துள்ளார். ஒரே பள்ளியில் பயிலும் இருவர் செய்த இரு வேறு சாதனைகளையும் கண்ட கூடியிருந்த மாணவ, மாணவிகள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து இருவரும் செய்த நூதன சாதனை இரண்டும் கின் னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

சிறுத்தை தாக்கியதில் சிறுவன் படுகாயம்

கோவை, ஏப்.10- வால்பாறை அருகே சிறுவனை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி  உள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பன்னி மேடு பேக்டரி டிவிசன் பகுதியில் வசித்துவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் பேப்பையா - கீதா தேவயான் தம்பதி யின் மகன் ஆகாஷ் (5). இந்நிலையில், ஞாயிறன்று காலை  அப்பகுதியில் உள்ள கால்வாயில் துணிகளை சலவை செய்வ தற்காக பெற்றோர் மகனையும் கூட்டிச் சென்றுள்ளனர். அப் போது தந்தை துணி துவைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஆகாஷ் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தின் அரு காமையில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப் போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று, அச்சிறுவனை பிடித்துள்ளது. இதனை அறிந்த பேப்பையா கல்லை எடுத்து சிறுத்தையை தாக்கியதால், மகனை விட்டு விட்டு சென்றது. இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, வனத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆகாசை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, மனித உயிர் களை தாக்கும் சிறுத்தையை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக் குள் விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் அவதி

கோவை, ஏப்.10- வால்பாறை மார்க்கெட்  பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  இங்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற் றும் சுற்றுலா பயணிகள் வரு கின்றனர். அப்பகுதியில் உள்ள கழிப்பிடம் ரூ.9 லட் சம் செலவில் புரணமைப்பு செய்யப்பட்டு, பல மாதங்க ளாக கிடப்பில் போடப்பட் டுள்ளது. இதுதொடர்பாக பல முறை நகராட்சி அலுவ லகத்தில் மனு அளிக்கப்பட் டும், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகின் றது. எனவே உடனடியாக இந்த கழிப்பிடத்தை பொது மக்கள் மற்றும் சுற்றுலா  பயணிகள் பயன்பாட்டிற் காக திறக்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.

100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்து 2 பேர் பலி

உதகை, ஏப்.10- குன்னூர் மலைப்பாதையில், 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த செங்குந்த பேட்டை குளக்கரை‌தெருவை சேர்ந்தவர்  செந்தில் (48). இவர் தனது மனைவி பூங்காவனம் (35).  உறவினரான சம்பத் (40), அவருடைய மனைவி சத்யா லட்சுமி (35), அருணகிரி (55) ஆகியோருடன் நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்தனர். இதையடுத்து ஞாயிறன்று இரவு சொந்த ஊருக்கு கிளம்பினர். காரை செந்தில் ஓட்டினார். உதகை - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், குன்னூர் மரப்பாலம் பகுதியில் சென்றபோது வளைவான பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  பின்னால் வந்த வாகன ஓட்டிகள் இதனை கண்டு, குன்னூர் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீய ணைப்பு குழுவினர் காரை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இரவு நேரமாக இருந்தால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.  இதையடுத்து அவர்களை இரவு 10.30 மணி அளவில் மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 5 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி, நித்திய சத்யா லட்சுமி மற்றும் அருணகிரி ஆகிய 2  பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் படுகாயமடைந்த செந்தில் உள்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பணியின் போது மரணமடைந்த தூய்மை பணியாளர் வழக்கை மூடி மறைப்பதாக பேரூராட்சி மீது சிஐடியு புகார்

ஈரோடு, ஏப்.10- பணி நேரத்தில் மரணமடைந்த தூய்மை பணியாளர் விவரங்களை நெரிஞ்சிப் பேட்டை பேரூராட்சி நிர்வாகம் மூடி மறைக்க, இறந்தவரின் மனைவியை மிரட்டி வழக்கை திரும்ப பெற வைத்திருப்பதாக குற்றஞ் சாட்டி, தமிழக முதல்வருக்கு சிஐடியு கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளது. ஈரோடு, அந்தியூர் வட்டத்தில், நெரிஞ்சிப் பேட்டை பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சி யில் பாலன் என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில், வேலை  நேரத்தில் பாலன் திடீரென மயக்கமடைந் தார். மருத்துவமனைக்கு கொன்று சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, பணியின்போது உயிரி ழந்த பாலனின் இறப்பை பதிவு செய்து உடற் கூறாய்வு செய்திருக்க வேண்டும். இதை  செய்ய வேண்டிய அன்றைய பேரூராட்சி  செயல் அலுவலர் பாலாஜி, பாலனின் இறப்பை பதிவு செய்ய மறுத்துவிட்டதுடன் பாலன்  குடும்பத்தாரிடம் உடனடியாகப் பிரேதத்தை எடுத்துச் சென்று எரித்து விட வேண்டுமென்று நிர்பந்தித்ததால், குடும்பத்தினரும் வேறு வழி யின்றி எரித்துள்ளனர்.  இதனையறிந்து, பாலன் குடும்பத்திற்கு பணியாளர் இழப்பீட்டு சட்டப்படி நிவாரண மும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் கொடுக்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்தி யது. அத்துடன் அவரது இறப்பை சட்டப்படி பதிவு செய்யாமல் கடமை தவறிய பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனைய டுத்து, பாலனின் மனைவி தங்கமணி ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலை யில் வேலையாள் இழப்பீட்டு சட்டப்படி நிவா ரணம் கேட்டு முறையிட்டார். அவரது முறை யீடு ஏற்றுக் கொள்ளப்பட்டு தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் இழப்பீடு குறித்து வழக்கு நடைபெற்று வந்தது.  

இந்நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, தற் போது பேரூராட்சியின் செயல் அலுவலராக உள்ள சசிகலா சம்பந்தமே இல்லாமல், வழக்கு தொடர்ந்த தங்கமணியுடன் வந்தார். பின்னர் தங்கமணி, நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். இது, அனை வருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செயல் அலுவலர் தன் சக ஊழியரைக் காப்ப தற்காக தங்கமணியை மிரட்டி உடன் வந்து வழக்கை வாபஸ் பெற வைத்துள்ளதாக சிஐ டியு குற்றம்சாட்டியுள்ளது.  இதுகுறித்து சிஐடியு ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரி வித்துள்ளதாவது, நெரிஞ்சிப்பேட்டை பேரூ ராட்சியின் தற்போதைய செயல் அலுவலர், சக ஊழியருக்காக தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த தொழிலாளியை மிரட்டி வழக்கை திரும்பப்பெற வைத்தது அவரது உரிமையை பறித்துள்ளார். இது சட்ட  விரோதமானதுமாகும். எனவே, தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளியின் வழக்கை வாபஸ் பெற வைத்த செயல் அலுவ லர் சசிகலா மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நேரத்தில் இறந்த பாலன் குடும்பத்தாருக்கு வேலையாள் இழப்பீட்டு சட்ட நீதிமன்ற வழக்கினை திரும்ப நடத்திடவும், அதன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு நிவார ணம் கிடைத்திட ஆவண செய்திட வேண்டும். மேலும், பணி நேரத்தில் இறந்த தூய்மை பணி யாளரின் இறப்பை பதிவு செய்யாமல் கடமை  தவறிய அப்போதைய செயல் அலுவலர்  பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.