கோவை, மார்ச் 2- கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் வேலைநிறுத் தம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை யடுத்து வேலை நிறுத்த போராட் டத்தை விசைத்தறி உரிமையாளர் கள் விலக்கிக் கொள்ளவுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் கடந்த ஐன வரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த நவம்பர் மாதம் அமைச்சர் சாமிநாதன் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவி கிதமும், இதர ரகத்திற்கு 20 சதவிகி தமும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஒப்பந்தப்படி கூலி உயர் வினை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க மறுத்ததால் விசைத்தறி உரி மையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரு மாத காலமாக நடைபெற்று வந்த போராட்டத்தின் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வருவாய் இன்றி தவித்து வந்தனர்.
இதற்கிடையே, ஜவுளி உற்பத்தியாளர்களின் நியா யமற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சனையில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 19 சதவீதமும் , இதர ரகத்திற்கு 15 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியா ளர்களும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டனர். இதையடுத்து பொதுக் குழுவை கூட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள் வது தொடர்பான அறிவிப்பை வெளி யிட உள்ளதாக கூலிக்கு நெசவு செய் யும் விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.