districts

img

அறிவிப்பின்றி விவசாயி வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு

நாமக்கல், நவ.1- எலச்சிபாளையம் அருகே விவசாயி-யின் வீட்டிற்கு மின்  இணைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடை பெற்ற போராட்டத்திற்கு பிறகு மீண்டும் மின்வாரியம் மின்  இணைப்பை வழங்கியது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அகரம் என்ற  ஊரில் விவசாயி இன்னாசி (70) என்பவர் வசித்து வருகிறார்.  இவரது வீட்டிலுள்ள  மின் இணைப்பு மீட்டர் பெட்டியில் உள்ள  பாதுகாப்பு வளையங்கள் தானாகவே பழுதடைந்தது. இது குறித்து எலச்சிபாளையம் மின்சாரத் துறையின் மூலம் கடிதம் ஒன்று விவசாயி இன்னாசிக்கு வழங்கியுள்ளனர். வழங்கப்பட்ட கடிதத்தின் மூலம் ரூ.2055 கட்ட வேண்டும் என  குறிப்பிட்டுள்ளது. ஆனால் கூடுதலான தொகை வேண்டும்  என உதவி பொறியாளர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் இன்னாசி, “கூடுதலான பணம் நான் கட்ட முடி யாது; அரசு அறிவித்த பணத்தை மட்டும் கட்டுவேன்” என கூறி யுள்ளார். இதனால் திங்களன்று எலச்சிபாளையம் பகுதி  மின்வாரிய ஊழியர்கள் இன்னாசி வீட்டின் மின் இணைப்பை  துண்டித்து விட்டார். இதனால் இவரது வீடு இருளில் மூழ் கியது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் தீப்பந்தம் ஏற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலருமான சு.சுரேஷ், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் பாதிக் கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செவ்வாயன்று மாலை எலச்சிபாளையம் மின்சார துறை அலுவலர்கள் விவசாயி இன்னாசியின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கினர். இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயி  குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.