districts

கிரிஷி நிறுவனத்தின் மாட்டுத்தீவனத்தை உண்ட 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்குப் பாதிப்பு

திருப்பூர், டிச.28-  கிரிஷி நிறுவனத்தின் மாட்டுத்தீவனத்தை  உண்ட 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு  பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடைத்துறையில் புகார் செய் தும்‌ நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது எனத் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, கிரிஷி நியூட்ரிசன் கம்பெனி  பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் கால் நடைகளுக்குக் கலப்பு தீவனங்களை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விற் பனை செய்து  வருகின்றது. இந்நிறுவனத்தின்   கிருஷி பைபாஸ் ப்ளஸ் என்ற தீவனத்தை உடு மலை வட்டம், தேவனூர் புதூர், பொன்னேரி  பகுதியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாடு களுக்கும், தாராபுரம் தாலுகா பொன்னி வாடி கிராமத்தில் உள்ள 60 மாடுகளுக்கும் விவசாயிகள் வைத்துள்ளனர். இத்தீவனம்  வைத்த உடன் மாடுகளுக்கு வயிறு உப்புசம்  வயிற்றுப்போக்கு, இரத்தக்கழிச்சல் ஏற்பட் டுள்ளது. மேலும், தண்ணீர் குடிக்க முடியா மல் சில மாடுகள் உயிரிழக்கும்  நிலையில் உள் ளன. இதனால் கறவை மாடுகளின் பால் உற் பத்தி  பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மருத் துவச் செலவும் கூடுதல் சுமையை ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து நிறுவனதரப்பிற்குத் தகவல்  தெரிவிக்கப்பட்ட உடனே  விவசாயிகளிடமி ருந்து தீவன மூட்டைகளை அவசர அவச ரமாகத் திரும்ப எடுத்துச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து தாராபுரம் தாலுகா கால்ந டைத்துறை உதவி இயக்குநரிடம் விவசாயி கள் புகார் செய்துள்ளனர். இதற்கு நாங்கள்  ஒன்றும் செய்யமுடியாது என பதில் அளித் துள்ளனர். உடுமலை, பொன்னேரி கிராம விவ சாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் ஆப் பில் புகார் செய்துள்ளனர். மேலும், ஆங் காங்கே கால்நடைத்துறையினரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளது.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இத்தீவ னத்தால் கால்நடைகள் பாதிப்பு அடைந் துள்ளன. கோவை மாவட்டம் தேக்கம்பட்டி யில் மூன்று ஆடுகள் இறந்து விட்டதாக செய் திகள் வந்துள்ளன. மாவட்ட நிர்வாகமும், கால்நடைத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அழிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கிய இந்நிறுவனத்தின் மீது சட்டரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப் பீட்டை மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண் டும் கூறப்பட்டுள்ளது.