திருப்பூர், நவ.14 - பீமா சுகம் செயலியால் எல்ஐசி முகவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என எல்ஐசி முகவர் சம் மேளன கூட்டுக்குழுவினர் திருப்பூ ரில் ஆர்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் மூலம் பிரதமருக்கு மனு அனுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்களன்று எல்ஐசி முக வர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட் சியர் மூலம் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். அம்மனுவில் தெரிவித்துள்ள தாவது, இதில் நாடு முழுவதும் 13.7 லட்சம் முகவர்கள் மற்றும் பாலீசி தாரர்கள், எல்ஐசி நிறுவனம் ஆகிய வற்றின் நலனைப் பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக எல்ஐசியின் மொத்த பாலீசிகளில் 97 சதவிகிதம் பாலீசிகள் நேரடியாக முகவர்கள் மூலமே பெறப்படுகிறது. இந் நிலையில் பீமா சுகம் என்ற செயலியை அறிமுகப்படுத்துவது முகவர்களைப் பாதிக்கும். ஐஆர்டிஏஐ ஏற்படுத்தும் மாற் றங்கள் எல்ஐசி நிறுவனம், முக வர்கள் மற்றும் பாலீசிதாரர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. எனவே பாலிசிதாரர்கள், முக வர்கள் மற்றும் எல்ஐசி நிறுவ னத்தின் நலனைப் பாதுகாக்க முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இதில் சத்தியமங்கலம், கோபி, காங்கேயம், பெருந்துறை உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எல்ஐசி முகவர்கள் திரளானோர் பங்கேற் றனர். சம்மேளனத் தலைவர் ஜி.வி. குமணன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.