தருமபுரி, அக்.20- மாவட்டந்தோறும் சட்டக்கல்லூரி துவங்க வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு தருமபுரி நான்கு ரோடு அருகே உள்ள முத்து இல்லத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வழக்கறி ஞர் பி.மாதேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செய லாளர் முத்து அமுதநாதன், தேசியக்குழு உறுப்பினர் எஸ். பொன்ராம், மாவட்ட நிர்வாகிகள் கே.கபிலன் பி.கோவிந்த சாமி இரா.எழிலரசு, சுரேஷ் முரளி ஆகியோர் உரையாற்றி னர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாது காப்போர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினார். இதில், தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத் திற்கு போதுமான அளவில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். நீதிமன்றங்களில் கழிப்பிடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். மாவட்டந்தோறும் அரசு சட்டக் கல்லூரி துவங்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதனைத்தொடர்ந்து மாநாட்டில், அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலைவராக சி. மாதேஷ், செயலாளராக பி.கோவிந்தசாமி, பொருளாள ராக கே.கபிலன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.