districts

img

மீண்டும் கொரோனா: தயார் நிலையில் அரசு மருத்துவமனை

கோவை, டிச.27- கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத் திக்கொள்ள வேண்டும் என சுகா தாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி  உள்ளனர். இதனிடையே கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தயார்  நிலையில் இருப்பது குறித்த ஒத்திகை கோவை, நீலகிரி உள் ளிட்ட மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில்  பரவத் தொடங்கி பெரும்பாலான நாடுகளில் 2 ஆண்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு  கொரோனா தடுப்பூசி அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் பயனாக கொரோனா நோய்த்தொற்று பரவல்  கடந்த ஓராண்டாக குறைந்தது.  இந்நிலையில், பல நாடுகளில் மீண்டும் புதிய வகை கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது. இதனால், விமான நிலையங்களில் பரிசோதனை, மாதிரிகள் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 32.40 லட்சம் பேரும், 2 ஆவது தவணை தடுப்பூசி 29.27 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை 2.90 லட்சம் பேர் மட்டுமே செலுத் திக்கொண்டுள்ளனர். எனவே, முதல், இரண்டாம் தவணை தடுப் பூசி, பூஸ்டர் தவணை தடுப்பூசி களை இதுவரை செலுத்திக் கொள் ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை துணை  இயக்குநர் அருணா கூறுகையில்,  கோவையில் முதல், இரண்டு  தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட அளவு பூஸ்டர் தடுப் பூசியை செலுத்திக்கொள்ள மக்கள்  ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று  பாதிப்பு பெரியளவில் இல்லாத தால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளதால் பூஸ்டர் தடுப் பூசி செலுத்திக்கொள்வது பாதுகாப் பானது. எனவே, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு  மருத்துவமனைகளில் பதிவு செய்து கொள்ளலாம். ஏனெனில் ஒன்றி ரண்டு நபர்களுக்காக மட்டும் தடுப் பூசி வயல்களைப் பிரிக்க முடியாது.

அவ்வாறு பிரிக்கும்போது அதிக  அளவு வீணாவதற்கு வாய்ப்புள்ளது.  எனவே, குறிப்பிட்ட அளவு நபர்கள் பதிவு செய்தால் உடனடியாக தடுப் பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப் படும், என்றார். இதனிடையே செவ்வாயன்று, கோவை அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில், கொரோனா தொற்றாளர் களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும்  தயார் நிலையில் இருப்பது குறித்த  ஒத்திகை கோவை அரசு மருத்துவ மனையில் செவ்வாயன்று நடை பெற்றது. இதனை கோவை மாவட்ட  ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வை யிட்டார். உதகை உதகை அரசு மருத்துவமனை யில் கொரோனா நோய் தடுப்பு ஒத்திகை செவ்வாயன்று நடைபெற்றது. இந்த ஒத்திகை மூலம் மாவட்டத்தில் கொரோனா ஏற்பட்டால் அதை தடுக்க தேவை யான அளவு மருத்துவ வசதிகள்,  படுக்கை வசதிகள், ஆக்சிஜன், மருத்துவர்கள், மருத்துவ பணியா ளர்கள் தயார் நிலையில் இருப்பதை  பொதுமக்களுக்கு காட்டப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தற் போது வரை கொரோனா பாதிப்பு  இல்லை. ஆனாலும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக 15 ஆக்சிஜன் மற்றும் சுவாசக் கருவி கள் வசதியுடன் கூடிய படுக்கை களும், 60 சாதாரண படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் 200 படுக்கை வசதி  வரை அதிகரித்துக் கொள்ள ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.