districts

img

வயல்களில் எலிகளை கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை

தாராபுரம், பிப்.18- தாராபுரம் பகுதிகளில் உள்ள நெற்பயிர்களை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ப.கணேசன் சனி யன்று ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு எலிகளை கட் டுப்படுத்த ஆலோசனை வழங்கினார். தாராபுரம் வட்டாரத்தில் அமராவதி பழைய மற்றும் புதிய  ஆயக்கட்டுப் பகுதிகளில் நெற்பயிர் 4000 ஹெக்டர்க்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் அறுவடைநிலை மற்றும் முதிர்ச்சி பருவத்தில் உள்ள வயல்களில் எலிகளின் பாதிப்பு தளவாய்பட்டிணம், ஊத்துப்பாளையம், செலாம் பாளையம், சின்னக்காம்பாளையம் பகுதிகளில் பரவலாக தென்படுகிறது. இதை ஆய்வு செய்த பின் எலிகளை கட்டுப்ப டுத்த தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ப.கணேசன் எலிகளின் பாதிப்பிலிருந்து நெல் வயல்களை பாதுகாக்க ஆலோசனைகள் வழங்கினார்.