districts

img

சட்டம் – ஒழுங்கு குறித்து ஆலோசனை

கோவை, டிச.8- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்  தலைமையில் சட்டம் - ஒழுங்கு மற்றும்  சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடை பெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் மீதான நடவ டிக்கைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் கேட்டறியப்பட்டது. இனிவரும் காலங்களில் சட்டம் ஒழுங்கை காக்கும் நடவ டிக்கைகள் சாலை பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது. மேலும், கோவை மாநகரில்  பல்வேறு சாலைகளில் குடிநீர் போன்ற பணி களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி கொள்வதால், அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரி கிறது. முன்னதாக, இந்த ஆய்வுக்கூட்டத்தில்  கோவை மாநகராட்சி ஆணையாளர்   மு.பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரி நாராயணன்,மாநகர காவல்  துணை ஆணையாளர் சந்தீஸ்,  மாவட்ட  வருவாய் அலுவலர் ப்பி.லீலா அலெக்ஸ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;