திருப்பூர், ஜன.30- திருப்பூரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டி கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகி றது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறி விக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி திருப்பூர் மாநகரில் தேர்தல் நடத்தை விதிகளின்படி, கடந்த 2 நாட்களாக பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற் றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக 2,200 விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இதில் சுவர் ஓவியங்களும் மறைக்கப்பட்டு வருகிறது.