districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சேலம், ஆக.17- சேலம் அருகில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள் ளார். சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த சாத்தப்பாடியை சேர்ந்தவர் கண்ணன் (25). இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில்  கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அருண் கபிலன் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று சாராய வியாபாரி தனபாலை குண்டர் சட்டத் தில் கைது செய்து ஆட்சியர் கார்மேகம் புதனன்று உத்தர விட்டார்.

ரூ.2.30 லட்சம் லஞ்சம் வாங்கிய  அதிமுக ஊராட்சித் தலைவர் கைது

திருப்பூர், ஆக. 17 - திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட சுண்டக்காம்பாளையம் ஊராட்சித் தலைவர் கையூட்டு பெற்றபோது பிடிபட்டார். சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் ஆலை விரிவாக்கப்  பணி அனுமதிக்காக ஊராட்சிமன்றத் தலைவர், அதிமுகவை  சேர்ந்த ஆனந்த் (எ) லோகநாதன் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டி ருக்கிறார். அதில் ஒரு பகுதியாக ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம்  இரசாயண பொடி தடவிய பணத்தைபெறும் போது திருப்பூர்  மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அவரைப்  பிடித்து கைது செய்தனர். அத்துடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் சோதனை மேற் கொண்டு, விசாரணை நடத்தினர். ஆலையில் எடை மேடை  அமைத்து விரிவாக்கப் பணிக்காக அனுமதி வழங்க ரூ.6  லட்சம் லஞ்சம் கேட்டதாக அதன் உரிமையாளர் ராதாகிருஷ் ணன் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட  லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நடவடிக்கை.மேற்கொண்ட னர்.

ரூ 1.30 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஆக.17 - சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடை பெற்ற நிலக்கடலை ஏலத் தில், ரூ.1.30 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் குவிண்டால் ஒன் றுக்கு முதல் ரக நிலக்கடலை  ரூ.7,900 முதல் ரூ.7,800 வரை யிலும், இரண்டாம் ரக நிலக்க டலை ரூ.7,500 முதல் ரூ7,600  வரையிலும், மூன்றாம் ரக  நிலக்கடலை ரூ.7,400 முதல்  ரூ.7,500 வரையிலும் ஏலம்  போனது. மொத்தம் ரூ.1.30  லட்சத்துக்கு ஏலம் நடைபெற் றது.

ரூ.5.56 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் ஆ.ராசா எம்.பி., தொடங்கி வைத்தார்

அவிநாசி, ஆக.17 - அவிநாசி  பகுதிகளில் ரூ. 5 கோடியே 56 லட்சம் மதிப்பிலான  வளர்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப் பினர் ஆ.ராசா செவ்வாயன்று தொடங்கி வைத்தார். அவிநாசி பேரூராட்சி மங்கலம் சாலையில் ரூ.77.60  லட்சம் மதிப்பில் தார் சாலை, சூளை முதல் சாலையப்பா ளையம் வழியாக கோவை சாலை வரை ரூ.77.22 லட்சம் மதிப் பில் தார் சாலை,  துலுக்கமுத்தூர் ஊராட்சியில் ரூ.48.80 லட்சம்  மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடம்  அமைக்கும் பணி, வடக்குத் தெரு, குறுக்குத் தெருவில் ரூ.9.29  லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, புலிப்பார் ஊராட்சியில் ரூ. 31.55 லட்சம் மதிப்பில் வாலியூர் பிரிவு முதல் ஊராட்சி எல்லை  வரை தார் சாலை, தத்தனூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப் பில்  சாவக்கட்டுப்பாளையம் ராம் நகரில் கான்கிரீட் சாலை,  ரூ.50 லட்சம் மதிப்பில் ஆவாரங்காடு முதல் வெள்ளமடை வரை தார் சாலை, தெக்கலூர் ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப் பில் ஆலாம்பாளையம் அருந்ததியர் காலனி அருகில்  கான்கிரிட் பாலம் அமைத்தல் என மொத்தம் ரூ.5 கோடியே  56 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளை  நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத் தார். இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப் பினர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சி தலை வர் தனலட்சுமி பொன்னுசாமி, தத்தனூர் ஊராட்சி மன்ற தலை வர் விஜயகுமார், பொறுப்பாளர்கள் சரவணன் நம்பி, பழனி சாமி, சிவபிரகாஷ், பால்ராஜ், திராவிடன் வசந்த் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

சிவன்மலை அருகே கிரானைட் கல்குவாரி கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து

திருப்பூர், ஆக. 17 - திருப்பூர் மாவட்டம் காங்கேயம்வட் டம் சிவன்மலையை ஒட்டி சின்னமலை யில் 42 ஏக்கர் பரப்பளவில் டாமின் நிறுவ னத்தின் கிரானைட் கல் குவாரி அமைக்க  கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கெடுத்த பொதுமக்களின் ஒட் டுமொத்த எதிர்ப்பால் இக்கூட்டம் பாதி யில் முடிந்தது.  சிவன்மலை அருகே சின்னமலை யில் புதன்கிழமை இந்த கருத்து கேட்புக்  கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவ லர் ஜெய்பீம் தலைமை ஏற்றார். திருப் பூர் மாவட்ட வடக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சரவ ணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். முதலில் டாமின் நிறுவனத்தைச்  சார்ந்தவர்கள், இந்த கிரானைட் திட்டத் தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  அறிக்கையை திரையில் வெளியிட்டு விளக்கிப் பேசினர். அடுத்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங் கிணைப்பாளர் இரா.சா.முகிலன் பேசு கையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  முழுமையான அறிக்கையோடு இணைக்கப்பட வேண்டிய 40 வகை யான ஆவணங்களில் ஒரு ஆவணங் கள் கூட அந்த அறிக்கையில் இணைக் கப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  அதிகாரிகளிடமும் ஆவணங்கள் எது வும் இல்லை.

இதனால் திட்டத்தைப்  பற்றி யாரும் எதுவும் அறிந்து கொள்ள  முடியவில்லை. டாமின் நிறுவனத்தின்  கிரானைட் குவாரி இணைப்பு ஆவணங் களை பதிவேற்றம் செய்யாமல் இக்கூட் டத்தை நடத்துவது மிகப்பெரிய சட்ட  விரோதம். எனவே கருத்து கேட்பு கூட் டத்தை நடத்தாமல் ரத்து செய்ய வேண் டும்” எனக் கூறினார். அதேபோல் இக்கூட்டத்தில் பேசிய வர்கள், சிவன்மலை அருகே இத்திட்டம்  வேண்டாம், இப்பகுதியில் இரு பிஏபி  வாய்க்கால் செல்கிறது. இதன் மூலம்  1500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயப் பாசனம் பெறுகிறது. கிரானைட் குவாரி  நடத்தப்பட்டால் விவசாயம் முழுமை யாக அழியும் என்றனர். அத்துடன் காங்கேயம் ஊராட்சி ஒன் றியக்குழு தலைவர் மகேஷ்குமார் கூறு கையில், “இந்த கிரானைட் குவாரி திட் டம் வேண்டாம் என ஊராட்சி ஒன்றிய  குழுவில் தீர்மானம் நிறைவேற்ற உள் ளதாகவும், எனவே இக்கருத்து கேட்பு  கூட்டத்தை நடத்த வேண்டாம், என்றார்.  சிவன்மலை ஊராட்சிமன்றத் தலைவர்  துரைசாமியும், சிவன்மலையை அழிக் கும் இந்த கிரானைட் குவாரி திட்டம்  வேண்டாம், என்றார். இக்கூட்டத்தில்  பங்கேற்ற மொத்தமக்களும், கருத்துக்  கேட்புக் கூட்டம் நடத்த வேண்டாம் என  முழக்கமிட்டனர். இதையடுத்து மாவட்ட வருவாய்  அலுவலர் ஜெய்பீம், இக்கூட்டத்தை விட்டு வெளியேறினார். தெளிவான  முடிவு காணாமல் கூட்டம் பாதியில் முடிவடைந்தது.

விபத்தில் சிக்கிய இளைஞர் ஆ.ராசா மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு

கோவை, ஆக.17- கோவை அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட திமுக எம்பி ஆ.ராசா தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆ.ராசா எம்.பி., சென்னை செல்வ தற்காக அவிநாசி சாலையில் கோவை விமான நிலை யத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கருமத்தம் பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த  இளைஞர் ஒருவர்  சாலை தடுப்பில் மோதி சிராய்ப்பு காயங்களுடன் மயக்கமுற்ற நிலையில் கிடந்துள்ளார். இதனை கவனித்த ஆ.ராசா  எம்.பி.,  உடனடியாக காரை நிறுத்தி, சக திமுக நிர்வாகிகள் உதவியு டன் இளைஞரை மீட்ட எம்பி ஆ.ராசா தனது கார்  மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் தன்னுடன் பயணித்த கோகுல் என்ற மருத்துவரையும் முதலுதவி சிகிச்சைக்காக உடன் அனுப்பி வைத்தார். விபத்தில் சிக்கிய நபர் திருப்பூரை சேர்ந்த தமிழ்செல்வன் என தெரிந்தது, விபத்து குறித்து அவரது உற வினர்களுக்கு தகவல் தெரிவித்த பின் ஆ.ராசா அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒயிலாட்டம் ஆடி உலகச் சாதனை!

கோவை, ஆக.17- இளம் தலைமுறையினரிடையே கிராமியக் கலை குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குழந்தைகள் ஒயிலாட் டம் ஆடி உலகச் சாதனை புத்தகத்தி்ல் இடம் பிடித்தனர். தமிழகத்தில் முன்னோர்கள் காலத்தில் கிராமப்புற பகுதி யில் பொழுது போக்காக வீட்டு நிகழ்ச்சிகள், கோவில் திரு விழாக்களில் நாட்டுப்புற நடனம் என்பது மிகவும் முக்கியத்து வமாக இருந்து வந்தது. குறிப்பாக தமிழ் கலாச்சார கிராமிய நடனமான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட் டம், தப்பாட்டம், பறையாட்டம் போன்ற நடனங்கள் அரங்கேறி வந்தது. ஆனால், தற்போது உள்ள காலகட்டங்களில் தமிழ் கலாச்சார நடனங்கள் அழிந்து வரும் சூழ்நிலையில் அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக கோவை, காந்திபார்க் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் ஒயிலாட்டம் ஆடி கிராமியக் கலை  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இளம் தலைமுறையின ரிடையே கொண்டு செல்லும் விதமாக நடைபெற்ற இவர்களது  நடனம் இன்டர்நேஷனல் பிரைட் ஆப் உலக சாதனை புத்த கத்தில் இடம் பிடித்தது. குழந்தைகளின் வண்ண ஆடைகளின் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.