districts

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மே 30இல் மாணவர் சேர்க்கை

சென்னை, மே 28 - தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிக ளில் ஜூன் 13 ஆம் தேதி முதல் மாணவர்  சேர்க்கை தொடங்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11ஆம்  வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை  வரும் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 2, 3, 4, 7, 8, 10 ஆகியவற்றுக்கும் ஜூன் 13 ஆம் தேதியே சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின்போதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப் பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.