districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசு ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை

ஈரோடு, ஜூலை 1- ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்கை  நடைபெற்று வருகிறது.  ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளை யத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் (எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக்கல் மோட் டர் வெகிக்கிள், ஏசி மெக்கானிக்)  மற்றும் பொறியியல் அல் லாத (கம்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் கட்டிட பட வரைவாளர்) தொழிற்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  8  ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12  ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத, தேர்ச்சி  பெற்றவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சியுடன் மாத  உதவித்தொகை ரூ.750, விலையில்லா லேப்டாப், சைக் கிள், சீருடை, பாட புத்தகங்கள், காலணி மற்றும் பஸ் பாஸ்  அனைத்தும் வழங்கப்படும். 8 ஆம் வகுப்புடன் இரண் டாண்டு ஐடிஐ பயிற்சி மற்றும் 10 ஆம் வகுப்புடன் இரண் டாண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கு அரசாணைப்படி பள்ளிக்கல்வித்துறை மூலம் முறையே 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சியின் போதே உதவித்தொகையுடன் பிர பல தொழில்  நிறுவனங்களில் இன்டர்ன்சிப்  ட்ரெயினிங் கொடுக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப் பும் ஏற்பாடு செய்துதரப்படும். மேலும் விபரங்களுக்கு  முதல் வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு. 0424-2275244, கோபிசெட்டிபாளையம். 04285-233234 மற்றும் உதவி இயக் குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஈரோடு. 0424-227 0044 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். சேர்க் கைக்கு விண்ணப்பிக்க வேண்டியகடைசி நாள்: 20.07.2022 ஆகும்.

கோவையில் காதுகேளாதோர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 1-  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் காதுகேளாதோர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். காதுகேளாதோர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை ரூ.3  ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவல கங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல் படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். கொக்ககோலா நிறு வனங்களில் ஒப்பந்த காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப் பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காதுகேளாதோர் கூட்டமைப்பினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு, கோரிக்கை பதாகைகளை ஏந்தியும், விசில் ஊதி, கைகளை உயர்த்தியும் கோரிக்கைகளை வலியு றுத்தினர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.

திருநங்கைகளுக்கான ரோட்டரி கிளப் துவக்கம்

கோவை, ஜூலை 1- தென்னிந்தியாவில் முதன்முறையாக கோவையில் திரு நங்கைகளுக்கான ரோட்டரி கிளப் துவக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் திருநங்கைகளுக்கான ரோட்டரி கிளப் தொடங்கப்பட் டுள்ளது. “ரோட்ராக்ட் கிளப் ஆப் டிரான்ஸ்மாம்” என்ற பெய ரில் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. கோவையில் நடைபெற்ற இதன் தொடக்கவிழாவிற்கு ரோட்டரி கவர்னர் ராஜசே கரன் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். இதில், ரோட்டரி இளை ஞர் சேவைப்பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம், ரோட் ராக்ட் கிளப் ஆப் டிரான்ஸ்மாம் கிளப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை தன்ஷிகாவுக்கு ரோட்டரிக்கான பிரத்யேக பதக்கத்தை அணிவித்து பரிசு வழங்கினார். கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரோட்டரி கிளப்பில் 16 திருநங்கைகள் இணைந்துள்ளனர். ரோட்டரி மாவட்டத் தில் உள்ள 160 சங்கங்களும், டிரான்ஸ்மாம் ரோட்டரி சங்கத்து டன் இணைந்து செயல்படும். பொது இடங்களில் திருநங்கை களுக்கான கழிப்பறைகள், திறன் மேம்பாட்டு பயிற்சி, சமு தாய பாதுகாப்பு விழிப்புணர்வு, வீடுகளில் இருப்போருக்கு சமுதாய பாதுகாப்பு, முதலுதவி பயிற்சி உள்ளிட்ட செயல் பாடுகளும் விரிவுபடுத்தப்படும் என நிகழ்ச்சியில் தெரிவிக் கப்பட்டது. இதுகுறித்து ரோட்ராக்ட் கிளப் ஆப் டிரான்ஸ்மாம் தலை வர் திருநங்கை தன்ஷிகா கூறுகையில், நாட்டில் முதல் திரு நங்கைகளுக்கான ரோட்டரி கிளப் ஒடிசாவில் தொடங்கப்பட் டது. தேசிய அளவில் இரண்டாவதாகவும், தென்னிந்திய அள வில் முதலாவதாகவும் ரோட்ராக்ட் கிளப் ஆப் டிரான்ஸ்மாம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளாக மாற் றத்தை உணர்பவர்கள் கல்வியை பாதியிலேயே தொலைத்து, வீட்டைவிட்டு வெளியில் வந்து விடுகின்றனர். சமுதாயத்தில் அவர்களை மேலே கொண்டு வருதல் ஆகியவை இந்த கிளப் பின் முக்கிய இலக்காகும், என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல்லில் நாளை துவக்கம்

நாமக்கல், ஜூலை 1- நாமக்கல்லில் ஞாயிறன்று (நாளை) நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக முன்னேற் ்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டை மேட்டில் ஞாயிறன்று (நாளை) தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இம்மாநாடு மாலை 5 மணி வரை நடைபெறு கிறது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து மாந கராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர் மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர் கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கின் றனர். இம்மாநாட்டிற்காக பொம்மைகுட்டை மேட்டில் 400 அடி நீளம் மற்றும் 240 அடி அக லத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட் டுள்ளது. சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகை யில் பந்தலில் இருக்கை வசதிகள் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல்லுக்கு வருகை  தரும் முதல்வருக்கு ராசாம்பாளையம் சுங்க சாவடியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் வரை உற்சாக வரவேற்பு அளிக்க உள் ளது. இதனால் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகிலிருந்து விழா நடைபெறும் மேடை  வரை என வழிநெடுகிலும் காவல்துறையினர்  பாதுகாப்பை பலப்படுத்தும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில்  கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப் புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதி கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக் கள் என அனைவரும் அமர தனித்தனி இடங் கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதியும் ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உணவு சாப்பிடும் வகையில் மாநாட்டு திடலில் பெரிய அளவிலான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள் ளது. மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங் கள் நிறுத்துவதற்கு 10 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தி ஏலம்

நாமக்கல், ஜூலை 1- ராசிபுரம் அருகே உள்ள  ஆர்சிஎம்எஸ் சங்கத்தின் கிளை வளாகத்தில் வியாழ னன்று பருத்தி ஏலம் நடை பெற்றது. இதில், ஆர்சிஏச் ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ஒரு குவிண் டால் ரூ.9 ஆயிரத்து 959க்கும்,  சுரபி ரகப்பருத்தி ஒரு குவிண் டால் அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 109க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகப்பட் சமாக ரூ.5 ஆயிரத்து 900க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 3 ஆயிரத்து 508 பருத்தி மூட்டைகள் ஒரு  கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட் டது.

காவலரைத் தாக்கி தப்பிய 3 நபர்கள்

அவிநாசி, ஜூலை 1- அவிநாசி முத்துச்செட்டிபாளையத்தில் உள்ள அன்னமார்  கோயிலில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த உண்டிய லில் பணம் திருடப்பட்டது. இதற்கிடையில்  ரோந்து பணியில்  இருந்த காவலரைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற 3 நபர்களை   காவல்துறை தேடி வருகிறது. அவிநாசி முத்துச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள அன் னமார் கோயிலில் வியாழனன்று கதவின் பூட்டு உடைக்கப் பட்டு உள்ளிருந்த உண்டியலில் பணம் திருடப்பட்டது  தெரியவந்தது.  இந்நிலையில், அவிநாசி காவல் நிலையத்தில் இணைப்பு காவலராக பணியாற்றும், திருப்பூர் ஆயுதப் படை  2 ஆம் நிலை காவலரான அருள்குமார் என்பவர் புதன்கிழமை  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவிநாசி  முத்துச்செட்டிபாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில்   பதிவு எண் இல்லாமல் சந்தேகப்படும்படியாக அதிவேக மாகச் சென்ற 3 நபர்களைப் பிடிக்கச் சென்ற போது,  அவர்கள்  மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் தாக்கியதில் காவலர் அருள்குமார் தலையில் பலத்த காயமடைந்தார்.  உடனிருந்தவர்கள் பிடிக்க முயன்றும் 3 நபர்களும் தப்பிச் சென்றனர். இதையடுத்து அருள்குமார் திருப்பூர் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவிநாசி காவல்துறை  முத்துச்செட்டிபாளை யத்தில் உள்ள அன்னமார் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபர்கள், ரோந்து பணியில் இருந்த காவல் துறையை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையால் குடும்பத்தில் தகராறு கணவர் தூக்கிட்டு தற்கொலை

தாராபுரம்,  ஜூலை 1 - தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட குடும்ப தக ராறு காரணமாக ரைஸ் மில் தொழிலாளி தூக்கு மாட்டி தற் கொலை செய்து கொண்டார். தாராபுரம் அடுத்த தளவாய் பட்டினம் முத்துராஜபுரம் பகு தியை சேர்ந்தவர் சங்கிலி ராஜ் (55) ரைஸ் மில் தொழிலாளி.  மனைவி கண்ணம்மாள் மற்றும் சரண்யா, கன்னியம்மாள் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும்  திருமணமாகி அவர்களது கணவர்களுடன் பாண்டிச்சே ரியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கிலி ராஜ் குடித் துவிட்டு  அடிக்கடி  மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக  கூறப்படுகிறது. இதையடுத்து கண்ணம்மாள் தனது மகள் வீட் டிற்கு பாண்டிச்சேரி சென்று விட்டார். இதனால் தனிமையில்  இருந்த சங்கிலிராஜ் சம்பவத்தன்று மனமுடைந்து சேலையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சங் கிலிராஜ் தாயார் லட்சுமி (75). தனது மகன் இரண்டு நாட்களாக  காணவில்லையென சங்கிலிராஜ் வீட்டுக்கு சென்று பார்த் துள்ளார். வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் மகன்  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில்  தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை செய்து உடலை பிரேதபரிசோத னைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய மின்தடை

அவிநாசி, ஜூலை-1 அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு  பணிகள் நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கி ழமை ஜூலை 2 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியத்தினர் அறிவித் துள்ளனர். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் :  அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனி வாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை,  மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு,  மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்தி நகர், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளை யம்.

ரூ. 6.81 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

திருப்பூர் ஜூலை 1- இந்த வாரம் வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்ப னைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 218 மூட்டைகளில் 10,260  கிலோ சூரியகாந்தி விதைகள் விற்பனைக்கு வந்திருந் தன. ஒரு கிலோ ரூ.56.91 முதல் ரூ. 68.36 வரை விற்பனையா னது. ஒட்டு மொத்தமாக ரூ. 6.81 லட்சம் ஏலம் நடைபெற்றது.  இதில் வேடசந்தூா், பூசாரிபட்டி, கருங்குளம், மார்க்கம்பட்டி, தாழையூத்து, புளியம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 22  விவசாயிகளும்  ஈரோடு, கஸ்பாபேட்டை, நடுப்பாளையம், முத்தூா், காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து 6 வணிகா்கள்  வந்திருந்தனா் என்று விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தார்.

அனுமதியின்றி செயல்பட்ட 19 டாஸ்மாக் பார்களுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூர், ஜூலை 1- திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட 19  டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் 250 டாஸ்மாக் கடைகள் செயல் பட்டு வருகின்றன. கடையின் அருகே பார்களும் செயல்பட்டு  வருகிறது.இந்த நிலையில் அனுமதி பெறாமல் பல்வேறு  இடங்களில் முறைகேடாக டாஸ்மார்க் பார்கள் செயல்பட்டு  வருவதாக திருப்பூர் மாவட்ட டாஸ்மார்க் மேலாளருக்கு  புகார்கள் வந்தன.அந்தப் புகாரின் அடிப்படையில் டாஸ் மார்க் அதிகாரிகள் கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட  முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனை யில் மாவட்டத்தில் 19 இடங்களில் முறை கேடாக பார்கள்  செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை யடுத்து அந்தப் பார்களை பூட்டி சீல் வைத்தனர். மேலும்  முறைகேடாக டாஸ்மாக் பார் நடத்தியவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு போலீசா ருக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிண்டலுக்கு உள்ளான நிர்மலா சீதாராமன் பேட்டி ‘குதிரை பேரத்திற்கு’ ஜிஎஸ்டி-யா?

புதுதில்லி, ஜூலை 1 - குதிரைப் பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை விளக்கினார்.  அப்போது, ‘குதிரைப் பந்தயம்’ என்பதற்குப் பதிலாக, ‘குதிரை பேரம்’ என அவர் பேசியது சமூக வலைதளங்களில் தற்போது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.   குதிரையை விலைக்கு வாங்க பேரம் பேசுவது போல, எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விலைபேசி வாங்குவதில் பாஜக கைதேர்ந்த கட்சியாகும். பாஜக-வையும் குதிரை பேரத்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திலும் தற்போதுதான் குதிரை பேரம் நடத்தி உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்துள்ளது. இந்நிலையில், எண்ணத்தில் இருப்பதுதான் வார்த்தையில் வரும் என்பதைப்போல, ‘குதிரைப் பந்தயம்’ என்பதற்குப் பதில், ‘குதிரைப் பேரம்’ என்று நிர்மலா சீதாராமன் உளறியது எதிர்க்கட்சிகளின் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தனது டுவிட்டர் பக்கத்தில், “உண்மை வெளியே வந்துள்ளது? குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி!” என நையாண்டி செய்துள்ளார். “வாக்குகளை தவிர்த்து நிர்மலா சீதாராமனுக்கு யோசிக்கும் திறன் இருப்பது எனக்கு தெரியும். ஆமாம், குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா டுவிட்டரில் கலாய்த்துள்ளார். “குதிரை பேரத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கும் நிர்மலா சீதாராமனின் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்” என காங்கிரசின் செயலாளர் வினீத் புனியாவும் நிர்மலா சீதாராமனின் வீடியோவை ரீடுவீட் செய்துள்ளார்.