திருப்பூர், ஏப்.23- திருப்பூர் வாவிபாளையம் கிளை நூலகத்தில் சனியன்று உலக புத்தக தின விழாவை முன்னிட்டு ஐந்து புரவலர்கள், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்கள் 200 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். பகுத்தறிவு இயக்கம் மாநில அமைப்பாளர் கே.முருகேசன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக வாவிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளி தலைமையாசிரியர் ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு இடையில் நடத்தப் பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. உடன் வாசகர்கள் பங்கேற்றனர். நூலகர் எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.