திருப்பூர், பிப்.3- திருப்பூரில் பறக்கும் படை அதி காரிகள் வியாழனன்று வாகன சோத னையில் ஈடுபடும்போது அ.தி.மு.க. துண்டுகள் கைப்பற்றப்பட்டன. திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லா மல் கொண்டுவரப்படுகிற பணம் வாகன சோதனையின் போது பறக் கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் 1-வது மண்டலத் திற்கு உட்பட்ட திருப்பூர்-வஞ்சிபா ளையம் காலேஜ் ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த சாமி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேலம் பாளையத்தை சேர்ந்த தீபன் (23), என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரது வாகனத்தை சோதனையிட்ட போது ரொக்க பணம் ரூபாய் 3 லட்சத்து 3 ஆயி ரத்து 450 இருந்துள்ளது. உரிய ஆவ ணங்கள் இல்லாததால் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட் சியில் ஒப்படைக்கப்பட்டது. இதுபோல் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதிகளில் பறக் ்கும் படை அதிகாரி பாரதிராஜா தலை மையில் அதிகாரிகள் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது இடுவம்பாளையத்தை சேர்ந்த நமச்சி வாயம் என்பவர் தனது நான்கு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்க ளின்றி ரொக்க பணம் ரூபாய் 51 ஆயிரத்து 500 மற்றும் அ.தி.மு.க. கட்சி துண்டுகள் 83 எடுத்து சென் றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி கள் பணத்தையும், அ.தி.மு.க. கட்சி துண்டுகளையும் பறிமுதல் செய்த னர்.