districts

உதகை ஆட்டோ ஒட்டுனர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

உதகை, பிப்.27- உதகையில் ஆட்டோ ஒட்டுநர்களின் கோரிக்கையில் உரிய தலையீடு செய்யப்ப டும் என மாவட்ட நிர்வாகம் அளித்த உறு தியை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக சுற்றுலாத் தொழிலே பிரதானமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து செல்வதில் வாடகை கார் ஒட்டுநர்களுக்கும், ஆட்டோ  ஒட்டுநர்களுக்கும் இடையே அடிக்கடி தக ராரு ஏற்பட்டது. இதை தீர்க்க நகர் பகுதி யில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோவை இயக்க வேண்டும்  என்று போக்குவரத்துத்துறை உத்தர விட்டிருந்தது.  இதில், பெரும்பாலான ஆட்டோ ஒட்டு நர்கள் நிர்ணயித்த தூரத்தை விட அதிக  தூரம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்வதால், வட்டார போக்குவரத்து அலு வலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்ல ஆட்டோக்களுக்கு அனு மதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஒட்டு நர்கள் திங்களன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். மேலும் வேலைநிறுத்த போராட்டம் குறித்து ஆட்டோக்களில் துண்டு பிரசுரங்கள் ஒட்டி வந்தனர். இந்நிலையில், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் ஆட்டோ  ஒட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வருகிற 4 ஆம் தேதி வரை ஒத்திவைக் கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் சண்முகம் கூறு கையில், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஆட் டோக்கள் இயங்கி வருகின்றன. மேலும் 15  கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட் டோக்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.  உதகை நகரில் மட்டுமே 2500 ஆட் டோக்கள் உள்ளன. ஆனால் இந்த ஆட்டோக் கள் நகரின் எல்லையான 5 கிலோ மீட்டர்  தூரத்திற்குள்ளேயே இயக்கப்பட வேண் டிய நிலை உள்ளது. எனவே தொலை தூரங்க ளுக்குள் ஆட்டோக்கள் சென்று வந்தால் மட் டுமே பிழைப்பு நடத்த முடியும். அதற்கு அதி காரிகள் அனுமதி வழங்க வேண்டும்.  மேலும்  ஆட்டோக்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்ப டுத்தி தர வேண்டும். இதுகுறித்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.