ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக தாட்கோ மூலம் கட்டப்பட்ட பின்னலாடை விரிவாக்கம் மற்றும் பயன்பாடு குறித்த தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, தாட்கோ செயற்பொறியாளர் சரஸ்வதி, மாவட்ட மேலாளர் ரா.அர்ச்சுன், சிப்காட் பொறியாளர் சுஜிதா ஆகியோர் உடனிருந்தனர்.