districts

img

கோவையில் ஏடிஜிபி ஆலோசனை

கோவை, நவ. 11- தமிழக காவல் துறை துணைத் தலைவர் (சட்டம் - ஒழுங்கு)  ஏ.அருண், கோவையில் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோவை பந்தய சாலையில் உள்ள மேற்கு மண்டல  காவல் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு வெள்ளிக் கிழமை வந்த தமிழக காவல் துறை துணைத் தலைவர் (சட்டம்-ஒழுங்கு) ஏ.அருணுக்கு, காவல் துறையினர் அணிவ குப்பு மரியாதை அளித்தனர். அதைத் தொடா்ந்து, காவல் துறை உயர் அதிகாரிக ளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த  ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மேற்கு மண்டலத்தில்  உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் விபத்து களை குறைப்பது, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்ப டுத்துவது, போலீஸாருக்கு தேவையான அடிப்படை வசதி கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரி களுடன் ஏடிஜிபி அருண் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்  துறைத் தலைவர் கே. பவானீஸ்வரி, கோவை சரக டிஐஜி ஏ.சரவண சுந்தர், கோவை மாநகரக் காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், கோவை மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் மற்றும் மேற்கு மண்ட லத்தைச் சோ்ந்த காவல் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனர்.