ஈரோடு, ஜன. 4- கீழ்பவானி பாசன பகுதிகளில் முதற்கட்டமாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் கூடுதல் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சிப்காட் பேருந்து நிலையம், நசியனூர் பார்க் அருகில் மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா முன்னி லையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத் தினை திறந்து வைத்தார். இதையடுத்து, அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழகம், ஈரோடு மண் டலத்தின் மூலம் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் அமைக்கப் பட்டு, நெல் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது. 2023 - 2024 பருவத் திற்கு கீழ்பவானி பாசன பகுதிக ளில் முதற்கட்டமாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. மேலும், நெல் அறுவடையின் அடிப்படையில் விவசாயிகளின் நலனுக்காக மாவட் டத்தில் கூடுதல் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக் கப்படவுள்ளது. கடந்த பருவத்தில் ஈரோடு மாவட்டத்தில் 74 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப் பட்டு, அவற்றின் மூலம் 96 ஆயி ரத்து 865.520 மெ.டன் நெல் கொள்மு தல் செய்யப்பட்டது. இதன் மூலம் 11 ஆயிரத்து 709 விவசாயிகள் பய னடைந்தனர். நடப்பு பருவத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக் கப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 ஆயிரத்து 613.680 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 3417 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். கீழ்பவானி பாச னப் பகுதிகளில் நெல் கொள்மு தல் நிலையம் மூலம் தோராயமாக 50 ஆயிரம் மெ.டன் நெல் கொள்மு தல் செய்யப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது என்றார்.