கோவை, மார்ச் 20- ஊராட்சிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட் டும் திட்டத்தின் கீழ் 57 பள்ளிகளில் ரூ.20.38 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கோவையிலுள்ள ஊராட்சிகளில் செயல்படும் தொடக்கப்பள்ளி மற் றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கூடு தல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், இராமபட்டிணத் தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் சூலூர் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறுகை யில், தமிழக முதல்வர் சட்டமன்றத் தில் அறிவித்தபடி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் சார்பில் ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு புதிய மற்றும் கூடு தல் வகுப்பறை கட்டடங்கள் கட்டிட ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ஆனைமலை வட்டத்தில் 2 பள்ளிகளில் ரூ.102 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், அன் னூர் வட்டாரத்தில் 5 பள்ளிகளில் ரூ.1.57 கோடி மதிப்பில் கூடுதல் வகுப் பறை கட்டடங்கள், காரமடை, மதுக் கரை, பெரியநாயக்கன்பாளையம் பொள்ளாச்சி வடக்கு. பொள்ளாச்சி தெற்கு, எஸ்.எஸ்.குளம், சுல்தான் பேட்டைசூலூர், தொண்டாமுத்தூர் என மொத்தம் 57 பள்ளிகளில்ரூ.20.38 கோடி மதிப்பீட்டில் புதிய மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட் டும் பணிகள் நடைபெற்று வருகின் றன, என்றார். பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், இராமபட்டிணம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.3210 லட்சம் மதிப்பிலும், சூலூர் ஊராட்சி ஒன்றி யம், பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டு வரும் கூடு தல் வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.