districts

img

மாணவர்களின் சாகச பயணம் கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

நாமக்கல், ஜூன் 24- நாமக்கல் அருகில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக் கட்டுகளில் சாகச பயணம் மேற்கொள்ளுகின்றனர். இதனை  தடுக்கும் நடவடிக்கையாக கூடுதல் பேருந்துக்கள் இயக்க  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் ஏராளமான அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளிபாளையம், ஆவரங்காடு பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 2000 மாணவிகளும், குமாரபாளையம் சாலையில் உள்ள ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவர் களும் கல்வி பயின்று வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதி களில் இருந்தும், கிராமப்புற பகுதியில் இருந்தும் மாணவ,  மாணவியர்  இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின் றனர். இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர் களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி பாளையம் காவேரி ஆர் எஸ் பகுதியில் இருந்து காலை  நேரத்தில் வரும் அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியவரே, 5  கிலோ மீட்டர் தூரத்திற்கு சாகச பயணம் மேற்கொள்கின் றனர். இதேபோல் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு  செல்லும் போதும் இதே நிலையை நீடித்து வருவதால் அசம் பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் போக்குவரத்துத் துறை யினர் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். காலை, மாலை நேரங்களில்  மாணவ, மாணவி யர்கள் சிரமமின்றி செல்லும் வகையில் கூடுதல் பேருந்து களை இயக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை  விடுத்துள்ளனர்.