தருமபுரி, அக். 30- கல்வி உரிமை சட்ட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளியில் சேர்ந்த பட்டியலின மாணவியிடம் கல்வி கட்டணம் கேட்டு அடாவடி செய்யும் தனியார் பள்ளி நிர் வாகத்தை கண்டித்து, புதனன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாண வர் சங்கத்தினர் பாலக்கோடு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் விளைவாக கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட் டது. தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் கட்டணமின்றி மாணவர்கள் சேர்ந்து படிக்க சட்டம் வழிவகுத்து கொடுத்துள்ளது. இந்நி லையில் தருமபுரி மாவட்டம் பாலக் கோடு வட்டம் தண்டுகாரன அள்ளி பஞ் சாயத்தில், ஸ்ரீ விஜய் வித்யலாய மெட் ரிக்குலேசன் என்ற தனியார் பள்ளி உள் ளது. இங்கு அனுமந்தபுரம் கிர மத்தை சேர்ந்த ஏழை கூலி தொழிலா ளியின் மகள் கல்வி உரிமை சட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளார். இந்நி லையில் தனியார் பள்ளி நிர்வாகம், கல்வி கட்டணம் செலுத்தக்கோரி கடந்த சுமார் 2 வருட காலமாக இந்த பட்டியலின மாணவிக்கு பள்ளி பாட புத்தகத்தை வழங்காமல் வன்கொடுமை செய்துள் ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகத் தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் பள்ளி கல்வி துறையிடமும், வருவாய் துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால், புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை. அனைத்து கட்டணங்களை யும் செலுத்தினால் மட்டுமே பாட புத்த கம் வழங்கி மாணவிக்கு பாடம் கற்றுக் கொடுக்க முடியும் என பள்ளி நிர்வாகம் நிர்பந்திக்கிறது. தனியார் பள்ளியின் இந்த அடாவடியை கண்டித்தும் பள்ளி யின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநா யக வாலிபர் சங்க வட்டதலைவர் டி. கோபி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.அருள் குமார், வட்ட செயலாளர் பி.கோவிந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர் குறளரசன், இந் திய மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜோசப் ஸ்டாலின், வட்டச் செயலா ளர் தொல்காப்பியன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.