சேலம், பிப்.9- சேலம் மாநகராட்சி 60 ஆவது வார்டில் இடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பித்துத் தர நடவ டிக்கை எடுக்கப்படும் எனக்கூறி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பா ளர் எம்.சி.சேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலம் மாநகராட்சி 60 ஆவது வார்டில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக எம்.சி.சேகர் போட்டியிடுகிறார். இவர் சீலநாயக்கன்பட்டி, குறிஞ்சி நகர், சின்னையன் காலனி உள்ளிட்ட பகுதி களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சீல நாயக்கன்பட்டியில் இடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யத்தை உடனடியாக புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்கப் படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக, இந்த வாக்கு சேகரிப்பின்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, ஆர். வெங்கடபதி, பொன்.ரமணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வைரமணி, திமுக கிளை செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.