districts

ரேபீஸ் இல்லாத நாடாக மாற்ற நடவடிக்கை: கருத்தரங்கில் தகவல்

உதகை, நவ.27- உதகையில் உள்ள ஹூமன் பயோ லஜிக்கல் இன்ஸ்டிடியூட்டின் வெள் ளிவிழாவை முன்னிட்டு, தட்டமைக் கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட் டது. விரிவான மனித மருத்துவ பரி சோதனைகள் மூலம் 9 மாதங்கள் முதல் 49 வயது வரையிலான தனி நபர்களுக்கு தட்டமை தடுப்பூசி பாது காப்பானதாகவும் பயனுள்ளதாக வும் அதன் இயக்குநர் தெரிவித்தார். தேசிய பால்வள மேம்பாட்டு வாரி யத்தின் துணை நிறுவனமான இந்தி யன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட்  அதன் மனித ஆரோக்கியப் பிரிவான  மனித உயிரியல் நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு  உதகையில் உள்ள  தனியார் ஓட்டலில் கருத்தரங்கம் நடந் தது. கருத்தரங்கிற்கு ஹியூமன் பயா லஜிக்கல் இன்ஸ்டிட்யூட் மேலாண்மை இயக்குநர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். இதில் நாடு முழுவதும் இருந்து ஆராய்ச்சியாளர்கள் பங் கேற்றனர். இந்த 25 ஆவது ஆண்டை  முன்னிட்டு தட்டமைக்கான தடுப்பூசி  அறிமுகப்படுத்தப்பட்டது.  இதனைத்தொடர்ந்து, ஆனந்த குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த நிறுவனத்தில், இந்தியாவின் முதல் சுத்திகரிக்கப் பட்ட வெறிநாய்கடிக்கான  (வெரோ செல் ரேபிஸ்) தடுப்பூசி உருவாக்கு வதற்காக தொடங்கியது. உலகளவில் தேவைப்படும் மக்களுக்கு இணை யற்ற தரத்தையும், மலிவு விலையில் வழங்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய ரேபிஸ் தடுப்பூசிகளை உற் பத்தி செய்யும் நிறுவனமாகவும், இந் தியாவின் உலகளாவிய நோய்த் தடுப்பு திட்டத்திற்கு டிபிடி, ஹெப டைடிஸ் பி மற்றும் பென்டாவலன்ட் தடுப்பூசிகளின் முக்கிய விநியோ கஸ்தராக உள்ளது. இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி, மார்ச் 2024க்குள் அறிமுகப்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. வியட்நாமின் பாலி வாக்குடன் பிரத்யேகமான கூட்டாண் மையில் மெபெல்லா எம், லைவ் அட் டென்யூடட் எம்ஆர் தடுப்பூசி உரு வாக்கப்பட்டுள்ளது. விரிவான மனித மருத்துவ பரிசோதனைகள் மூலம், 9 மாதங்கள் முதல் 49 வயது வரை யிலான தனிநபர்களுக்கு தட்டமை தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பய னுள்ளதாகவும் நிரூபிக்கப்பட்டுள் ளது. தட்டமைக்கான தடுப்பூசி ஏற்க னவே இரண்டு நிறுவனங்கள் தயா ரித்து வருகிறது. ரூபெவல்லா வைரஸ் குழந்தை களை பாதிக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு உண் டாக்கக்கூடியது. இதைத்தடுக்க  இந்த தடுப்பூசி உதவுகிறது. நாங்கள் ரேபீஸ் தடுப்பூசி உற்பத்தியில் முன் னோடியாக உள்ளோம். இந்தியா விற்கு 6 கோடி டோஸ் தடுப்பூசி தேவை. நாங்கள் 2 கோடி டோஸ் உற்பத்தி செய்து அரசுக்கு விநி யோக்கிறோம். சோதனை முயற்சி யாக கேரள மாநிலம், திருவனந்த புரம் மாவட்டத்தை ரேபீஸ் இல்லா மாவட்டமாக மாற்ற முயற்சி மேற் கொண்டுள்ளோம். இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா ரேபீஸ் இல்லா நாடாக மாற்ற நடவ டிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச் சலுக்கான தடுப்பு மருந்து கண்டு பிடித்துள்ளோம். விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும். சிக் கன்குனியா, ஜிகா, ரேபிசில்லா நோய் களுக்கான தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் பணி நடந்து வருகிறது, என்றார்.