தாராபுரம், ஆக.16 - நில உச்சவரம்பு நிலங் களை பயனாளிகளிடம் ஒப் படை செய்யாத வருவாய்த் துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு காத்தி ருப்பு போராட்டம் நடத்த ஆயத் தமானபோது கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி இப்பி ரச்சனையில் உரிய தீர்வு காண் பதாக உறுதியளித்தார். நில உச்சவரம்பு நிலங்களை உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கக் கோரி யும், வருவாய்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்தும் தாராபுரம் கோட் டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக, தீண் டாமை ஒழிப்பு முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, சமநீதிக் கழகம், தலித் விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்தன. அதன் படி இந்த அமைப்புகளைச் சேர்ந்தோர் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டப் பொரு ளாளர் அ.பஞ்சலிங்கம் உள்ளிட்டோர் தலைமையில் தாராபுரம் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் ஆயத்தமானார் கள். இதையடுத்து கோட்டாட்சியர் செந்தில் அரசன் இந்த அமைப்புகளின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் தாராபுரம், காங்கே யம் வட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக 5000க்கும் மேற்பட்ட குடும்பங் களுக்கு வழங்கப்பட்ட நில உச் சவரம்பு நிலங்களை உரிய பய னாளிகளிடம் ஒப்படைக்கக் கோரினர். முடிவில், ஒரு மாத காலத்திற்குள் சாத்தியமுள்ள அனைத்து நிலங்களையும் உரிய பயனாளிகளுக்கு கள ஆய்வு செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்தார். இப்போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாராபுரம் நிர்வாகி மேகநாதன், தலித் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் மா.வீ.சசிகுமார், சமநீதி கழகம் தலைமை ஒருங்கிணைப் பாளர் ஆதவன் இரா.அண்ணாதுரை, பு.இளைஞர் முன்னணி மூர்த்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.