திருப்பூர், ஏப்.19- குழந்தைகளிடம் தமிழ் மொழியைக் கொண்டு போக, அவர்களை வாசிப் புப் பழக்கத்துக்கு உட்படுத்த ஏராளமான செயல் திட்டம் தேவைப்படுகிறது என்று குழந்தைகள் இலக் கிய எழுத்தாளர் உமா நாத் விழியன் கூறினார். 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வில் ஐந்தாம் நாள் நிகழ்வான திங்களன்று “குழந்தைகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் உமாநாத் விழியன் பேசிய தாவது, பழந்தமிழ் பெருமை பேசுவது ஒரு புறம் இருந்தாலும், இன்றைக்கு குழந்தைக ளிடம் தமிழ் வாசிப்பு பழக்கம் இல்லை. குழந் தைகளை தமிழ் மொழியில் வாசிக்க வைப்ப தற்கு செயல் திட்டம் தேவை. தற்காலத்தில் பாடம் தாண்டிய வாசிப்பு மிக மிக குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் சிறுவர் புத்தகங்களை எத் தனை ஆசிரியர், பெற்றோர் வாசிக்கின்ற னர்? பள்ளிக்கு ஒரு சிறார் புத்தகம் கொடுத்து வாசிக்கச் செய்ய வேண்டும். வெறும் பேச் சில் இருந்தால் போதாது. ஏராளமான நூல கங்கள், புத்தகங்கள் இருந்தும் குழந்தை களிடம் புத்தகங்களை கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. இது இங்கு மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது.
யார் குழந்தைகள்?
கருவில் இருக்கும் பிஞ்சு முதல் 18 வயது வரை உடையவர்கள் குழந்தைகள் ஆவர். குழந்தைகளுக்கு வாழ்வதற்கான உரிமை, அவர்களது வளர்ச்சி, பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு என்ற நான்கு வகை உரிமைகள் உள்ளன. பாலர் சங்கங்கள், பள்ளிகளில் மாணவர் பேரவைகள் வேண்டும். இவை எல்லாம் குழந்தைகள் தொடர்பான அரசின் கொள்கைகளில் காகிதங்களில் எழுதி வைக் கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இல்லை. இவற்றைப் பற்றி தெரிந்து கொள் ளாமல், குழந்தைகள் உரிமைகளை அறிந்து கொள்ளாமல் குழந்தைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியாது.
குழந்தை வளர்ப்பு
ஒரு குழந்தை வளர ஒரு கிராமமே தேவை என்பது முதுமொழி! குழந்தைகள் வளர்வது வீட்டில் மட்டுமல்ல, தெருவில், பள்ளியில், டிவி, மொபைல், கணினி என சமூகத்தில் குழந்தைகள் ஏராளமான விச யங்களை உள்வாங்குகின்றனர். எனவே ஒரு குழந்தை வளர சமூகமே கை கொடுக்க வேண்டும். குழந்தைகள் வளர்வதில் நான்கு நிலை கள் உள்ளன. குழந்தைகளில் கைகளில் தூக்கி வைத்து கொண்டாடுவது, விரல் பிடித்து நடத்திச் செல்வது, நம்மை பின்தொ டர்ந்து குழந்தைகளை நடக்க வைப்பது, குழந்தைகளை நடக்க விட்டு நாம் பின் தொடர்ந்து செல்வது. அந்தந்த நிலைக்கு உரியதை நாம் செய்ய வேண்டும். இதை எங்காவது மாற்றிச் செய்தால் பிரச்சனை வருகிறது. சூழ்நிலை, நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்ளாவிட்டால் சிக்கல் வந்துவி டும். குழந்தைகளை வளர்ப்பதில் சர்வ ரோக நிவாரணி என்ற ஒற்றைத் தீர்வு எங்கும், எதி லும் இல்லை. குழந்தை வளர்ப்பில் தாய்மை என்ற சொல் உள்ளது. தந்தைமை என்ற சொல் இல்லை. ஆனால் குழந்தை பிறப்பு முதல் வளர்ப்பில் தந்தைகளுக்கும் முக்கியப் பங்குள்ளது. உயர் நடுத்தர, நடுத்தர குடும் பக் குழந்தைகள் வளர்ப்பு தவிர்த்து, ஏழை, விழிம்பு நிலை வீட்டுப் பிள்ளைகள் வளர்ப் பில் குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்க ளுக்கு கூடுதல் கடமை உள்ளது. பெற்றோர் கவனிப்பு கிடைக்காத, இல்லாத குழந்தைக ளுக்கு பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்க ளாக விழிப்புடன் செயல்பட வேண்டும்.
எந்த திணிப்பும் கூடாது
குழந்தைகளை நசுக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தால் பிற்காலத்தில் பெரிய பிரச்சனையை சந்திப்போம். குழந்தைக ளின் குழந்தைமையை பாதுகாப்பதுதான் மிகவும் முக்கியம். கல்வி, கலை என்று எந்தத் திணிப்பு செய்தாலும் அது குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையே. எது குழந் தைமையை நசுக்குகிறதோ, அதைத் தடுத் தாலே, தவிர்த்தாலே குழந்தைகள் கொண் டாட்டமாக வாழ ஆரம்பிப்பார்கள். தனியாக குழந்தைகளை வளர்ப்பது அர்த்தமற்ற செயல். அழகான வீடு கட்டி சுற்றிலும் சாக்கடை இருந்தால் மகிழ்ச்சி யாக இருக்க முடியுமா? எனவே நல்ல புரிதல் உள்ள சமுதாயம் இருப்பதுதான் குழந்தை கள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அவசி யம். வீட்டுக்குள் மட்டும் குழந்தை வளர்ப்பு பேசுவது போதாது, குழந்தைகளைக் கூட் டாக வளர்க்க வேண்டும். அதைப் பற்றி நாம் பேச வேண்டும். கூட்டாக குழந்தைகளை வளர்க்காமல் அவர்களே நன்றாக வளர்வார் கள் என்று நினைத்தால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. குழந்தை வளர்ப்பில் பெற் றோர் மட்டுமின்றி, பள்ளிக்கூடம், சமுதாயம் என கூட்டாக செயல்பட வேண்டும்.
மாறியுள்ள கல்வி முறை
நம் கல்வி மனப்பாட முறையில் இருந்து தரவுகளைக் கொண்டு, சீர்தூக்கி பகுத்த றிந்து பார்க்கும் முறைக்கு மாறி உள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை நாம் இன்னும் உணரவில்லை. பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இதில் விவாதிக்கலாம். குழந்தைகளைக் கூட்டாக வளர்க்க மேடை உருவாக்க வேண் டும். புத்தக கண்காட்சிகளும் குழந்தைக ளைக் கூட்டாக வளர்ப்பதில் முக்கிய பங்காற் றுகின்றன. கூட்டாக குழந்தைகளை வளர்ப் பதன் மூலம் குழந்தைகளை நாம் கொண் டாட முடியும். அவர்கள் உலகம் அதி அற்புத மானது. குழந்தைகள் உலகம் நாம் நுழைவ தற்கல்ல, அவர்கள் சந்தோஷமாக இருப்ப தற்குத்தான்! இவ்வாறு உமாநாத் விழியன் கூறினார். இந்த கருத்தரங்கில் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன் தலைமை வகித்தார். ஆர். கவிதா வரவேற்றார். கவிதையில் சமூக நோக்கு என்ற தலைப்பில் கவி.வெற்றிச் செல்வி சிறப்புரை ஆற்றினார். ஏராளமான கவிதைகளை சுட்டிக்காட்டி சமூகப் பிரச்ச னைகளைத் தொட்டுக் காட்டினார். ஓ.கே.டெக்ஸ் எம்.கந்தசாமி, எஸ்.பி. டெக்ஸ் எஸ்.பொன்னுசாமி, டைம்ஸ் டையிங் சி.விஜயகுமார், அம்மன் பேஷன் எஸ்.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரளானோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். நிறைவாக வரவேற்புக்குழு சார்பில் ஒய்.அன்பு நன்றி கூறினார்.