உடுமலை, ஜூன் 29– அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்தம் போட்ட விவசாயிகளின் தோட்டங்களில் லஞ்சம் கொடுத்தால்தான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என நிர்பந்திக்கப்படுகின்றனர். லஞ்சம் கொடுக் காத விவசாயிகளின் தோட்டங்கள் கரும்பு அறுவடை செய்யப்படாமல் காய்ந்து வீணா கிக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. மடத்துக்குளம் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் தமிழக அரசின் கூட்டுறவு துறை யின் கீழ் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக் குத் தேவையான கரும்பு பயிர் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயகளிடம் பெறுவதற்கு நேரிடையாக ஒப்பந்தம் செய்யபடுகிறது. பின்னர் ஆலை யில் அறவை தொடங்கும்போது ஒப்பந்தப் படி கரும்புகளை வெட்டி ஆலைக்கு கொண்டு வருவதுதான் முறை.ஆனால் இம் முறை கரும்பு விவசாயிகள் ஒப்பந்தப்படி கரும்புகளை வெட்ட அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வருக்கு விவ சாயிகள் அனுப்பியுள்ள புகார் மனுவில் உடுமலை மடத்துக்குளம் பகுதியில் கருப்பு விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அமராவதி கூட்டுறவு ஆலைக்குவழங்கு வதற்கு முறைப்படி ஒப்பந்தம் செய்துள்ளார் கள்.இந்த ஒப்பந்தப்படி கரும்பு வெட்டாமல் பணம் வசூலிக்கும்நோக்கில் அதிகாரிகள் காலம் தாழ்த்திவருகிறார்கள். இதனால் ஆலையின் ஒப்பந்தபடி கரும்பு வெட்ட வேண்டிய கட்டிங் எண் 15 என்பது ஆலையின் அறவை தொடங்கி இரண்டாவது நாளில் வெட்ட வேண்டும். ஆனால் தற்பொழுது வரை எமது தோட்ட கரும்பை வெட்ட அனு மதி தரவில்லை. ஆலையில் கட்டிங்க வரிசை எண் 34 வரை சென்றுவுள்ளதாக தகவல் வரு கிறது.
இதுகுறித்து சர்க்கரை ஆலையில் மேலாண்மை இயக்குநருக்கு கடிதம் வாயி லாக தெரியபடுத்தியும் நடவடிக்கை இல்லா தால் தோட்டத்தில் உள்ள கரும்புகள் வெட் டப்படாமல் காய்த்து வருகிறது. பின்னர் மடத்துக்குளம் தாலுகா குமார லிங்கம் பகுதியில் செயல்படும் பிரிவு கரும்பு அலுவலகத்தில் விவசாயிகள் கரும்பை வெட்ட அனுமதி தர கேட்டால் ரூ பத்தாயிரம் லஞ்சம் தந்தால் வெட்ட அனுமதி தருகிறோம் என்றார் கள். எங்களால் பணம் தர முடியாது என்பதால் இன்று வரை கரும்பு வெட்டப்படவில்லை, ஒப் பந்த முறையை சரிவர அமல்படுத்தாமல் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதிதரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என புகார் அனுப்பியுள்ளார்கள். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஏற் கனே நஷ்டத்தில் இயங்குவதாக கூறி பல மாதங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கமால் இருந்தும் கடந்த மாத ஆலை யின் அறவைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்ற னர் நிலையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் விவசாயிகளின் கரும்புகளை வெட்ட காலதாமதம் ஏற்படுத்துவதால் கரும் பின் பிழி திறன் குறைத்துவிடும்.இதனால் ஆலைக்கு நஷ்டம் ஏற்படுவதை தடுக்க தமிழக கூட்டுறவு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.