தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் நடவடிக்கை
ஈரோடு, மே 22- தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட் டின் கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்தால், கடை மூடப்பட அவசரத் தடையாணை பிறப்பிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள் ளார். புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற் பனை செய்வது போன்றவை தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உணவு மாதிரி எடுக்க தேவையான 2 கிலோ அளவிற்கு மேல் ஒரு வணிகரி டத்தில் கண்டறியப்பட்டால் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் குற்றவியல் நீதிமன்றத்தில் பிரிவு 59 உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், உணவு பாதுகாப்புத்துறை ஆணையரிடத்தில் அவசரத் தடை யாணை பெற்று அவ்வணிகரின் கடையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்ததற்காக காவல்துறையில் முதல் தக வல் அறிக்கை பதியப்பட்டிருந்தால் அதில் உச்சநீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் பிரிவு 59யும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரத்திற்கு எதிராக அவசரத் தடையாணைப் பெற்று வணிகத்தை நிறுத்து வது, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் மேற்கூறிய தண்டனைப் பிரிவை சேர்ப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகார்களை 94440 42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள் ளார்.
தொடர் மழையின் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரி, மே 22- தருமபுரி மாவட்டத்தில், பரவலாக பெய்து வரும் மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் சின்னாறு, வாணியாறு, வரட்டாறு, தொப்பையாறு, கேசர்குழி, நாகாவதி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட அணைகள் உள்ளது. இந்த அணைகள் மூலம் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்று வருகிறது. மாவட் டத்தில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையால், பெரும் பாலான அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த அணைகளில் இருந்து வடகிழக்கு பருவமழை காலம் முடிந்த பின் பாசனத் திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத னால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வந் தது. இந்நிலையில் மாவட்டத்தில் கோடை யில் குறிப்பிடத்தக்க வகையில் பெய்த மழையாலும், முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழையாலும் அணை களின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சனி யன்று நிலவரப்படி, 17.35 அடி உயரம் கொண்ட ஈச்சம்பாடி அணைக்கட்டு, அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அணைக்கட்டுக்கு வினாடிக்கு வரும் 596 கன அடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 65.27 அடி உயரம் கொண்ட வாணியாறு அணைக்கு நீர்வரத்து வினா டிக்கு 150 கனஅடியாக உள்ளது. அணை யின் நீர்மட்டம் 29.85 கனஅடியாக உயர்ந்து உள்ளது. 50 அடி உயரம் கொண்ட சின்னாறு அணைக்கு வினாடிக்கு, 32 கனஅடி நீர் ்வரத்து உள்ளது. எனவே, அணையின் நீர்மட்டம், 20 அடியாக உயர்ந்து உள்ளது. மொத்தம் 34.45 அடி உயரம் கொண்ட வரட்டாறு அணையில் தற்போது நீர்மட்டம் 28.20 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 60 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 24.60 அடி உய ரம் கொண்ட நாகாவதி அணையில் தற் போது நீர்மட்டம் 10.3 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 11 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 50 அடி உயரம் கொண்ட தொப்பையாறு அணை யில் தற்போது நீர்மட்டம் 23.66 அடியாக உயர்ந்துள்ளது. 25.2 அடி உயரம் கொண்ட கேசர்குளி அணையில் தற்போது நீர்மட்டம் 17.6 கனஅடியாக உயர்ந்துள் ளது. 14.76 அடி உயரம் கொண்ட தும்பல ஹள்ளி அணை நீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முன் களப்பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
பொள்ளாச்சி, மே 22- பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப் பகத்திற்குட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் முன்கள பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. டாப்சிலிப் அருகே உள்ள உலாந்தி வனச்சரக முன் களப்பணியாளர் களுக்கு தனியார் மருத்துவ மனை மூலமாக இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. இம்முகாமில் யானை பாகன் கள் மற்றும் வாட்ச்சர் உள் ளிட்ட முன்கள பணியாளர் களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இம்மருத் துவ முகாமானது ஆனை மலை புலிகள் காப்பத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
தருமபுரி: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.25 கோடியில் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி, மே 22- தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை யின் சார்பில் 12,820 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகர ணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர் சினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது, மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க அரசு பல் வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2021-2022 ஆம் நிதி ஆண்டில் மாற் றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 1401 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடை யாள அட்டைகளும், 4129 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித் துவம் வாய்ந்த அடையாள அட்டைகளும், கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1053 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000 வீதம் ரூ.2.17 கோடி பராமரிப்பு உதவித் தொகைகளும், 40 விழுக்காடுக்கு மேல் மனவளரச்சி குன்றி யோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் வழங் கும் திட்டத்தின் கீழ் 4318 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000 வீதம் ரூ.8.44 கோடி பராமரிப்பு உதவித்தொகை களும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 384 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.07 லட்சம் கல்வி உதவித் தொகைகளும் என மொத்தம் 12820 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.15.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உத விகள், உதவி உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங் கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முதியவர் திடீர் சாவு
ஈரோடு, மே 22- குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குமாரபாளையம் பேருந்து நிலைய பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக் கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவ ரது உடல் ஈரோடு அரசு மருத் துவமனை பிரேத பரிசோ தனை கூடத்தில் வைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து, குமாரபா ளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
கார் திருட்டு - இருவர் கைது
பொள்ளாச்சி, மே 22- பொள்ளாச்சி அருகே தலைமை ஆசிரியரின் காரை திருடிய கொள்ளையர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த வஞ்சியாபுரம் பிரிவு அம்மன் நகரைச் சேர்ந்தவர் உமாதேவி (48). இவர் கோவையிலுள்ள ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிகிறார். இவர் கடந்த மே 18 அன்று தனது மகளான சோபி யாவை தனது வீட்டில் இறக்கவிட்டு சாவியை தனது மகளிடம் கொடுத்துவிட்டு செல்லும்படி கூறியுள்ளார். அதன்படி கார் ஓட்டுநர் வசந்த் உமாதேவியின் மகள் சோபியாவை அவரது வீட்டில் இறக்கிவிட்டு காரின் சாவியை அவரிடம் கொடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனைய டுத்து மறுநாள் சோபியா தனது வீட்டின் முன்பு பார்த்த போது கார் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந் துள்ளார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலை யத்தில் தனது காரை கண்டுபிடித்து கொடுக்குமாறு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலை யில், சனியன்று பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி காந்திபுரம் திருமூர்த்தி லைன் வீதியைச் சேர்ந்த ராஜா வசந்த் (34) மற்றும் மாக்கினாம்பட்டி அடுத்த பாலமநல்லூர் புதுக் காலனியைச் சேர்ந்த பாலமுருகன் (38) ஆகியோரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு
ஈரோடு, மே 22- ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமை ஏலம் மூலம் வெல்லம் மூட்டைகள் விற்பனை செய்யப்படும். இதன்படி, இந்த வாரம் சனியன்று கூடிய மார்க்கெட்டில் வெல்லத்தின் வரத்து கடந்த வாரத்தை விட சற்று சரிந்து காணப்பட்டது. இதில், நாட்டு சர்க்கரை 2,100 மூட்டையும், உருண்டை வெல்லம் 2,900 மூட்டையும், அச்சு வெல்லம் 600 மூட்டையும் வரத்தா னது. இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,100 முதல் ரூ.1,200 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,150 முதல் ரூ.1,230 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,100 முதல் ரூ.1,220 என்ற விலையில் விற்பனையானது. வெல்லம் வரத்து குறைந்துள்ளதால், இந்த வாரம் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல் லம் மூட்டைக்கு ரூ.30 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டதாக மார்க்கெட் நிர் வாகிகள் தெரிவித்தனர்.
கடன் பிரச்சனையில் தலையீடு இந்து முன்னணி பிரமுகர் கொலை
உடுமலை, மே 22- உடுமலை அருகே கடன் பிரச்சனையில் தலையீடு செய்த இந்து முன்னணி பிரமுகர் ஞாயிறன்று கொலை செய்யப் பட்டார். உடுமலை, விஜயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவர் மகளிர் சுய உதவிக்க்குழுவில் ரூ.30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த அஸ் வின் பிரசாத் என்பவரது மனைவி வளர்மதி உத்தரவாதம் அளித்திருந்தார். இந்நிலையில், கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் கவிதா, தனது வீட்டை காலிசெய்ய முற்பட்டபோது, அதனையறிந்த வளர்மதி, அவரது கணவர் அஸ்வின் பிரசாத் மற்றும் அவரது குடும்ப நண்பரும், இந்து முன்னணி உடுமலை வடக்கு நகரச் செயலாளருமான குமர வேல் (26) ஆகியோர் சென்று கடனை திரும்ப செலுத்த வலியு றுத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் குமரவேலை, கவிதாவுடன் இருந்த நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அஸ்வின் படுகாயத்துடன் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு சென்ற காவல் துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய செந்தில் (31), ஆத்தியப்பன் (43) ஆகிய இருவரையும் கைது செய்த தனிப்படையினர், மேலும் தொடர்புடைய வர்களை தேடி வருகின்றனர்.
17 சதவிகித அகவிலைப்படியை உடனே வழங்க சிஐடியு கூட்டுறவு பணியாளர் கோரிக்கை
திருப்பூர், மே 22- நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு 17 சதவிகித அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் கோரி யுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க நிர்வாகக் குழு கூட்டம், மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படி 17 சதவிகிதத்தை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழி யர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்சன் திட் டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்கள் சம் பந்தமாக (தொழிலாளர் நலன்) பல கடிதங்கள் கொடுக் கப்பட்டும், இன்றைய தேதி வரை இணைப்பதிவாளர் அலட் சியப்படுத்துவது சரி அல்ல. எனவே, சங்கங்களை அழைத்து பேசி சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும் என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயலாளர் கே.மகேந்திரன் நன்றி கூறி னார்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி
திருப்பூர், மே 22- திருப்பூர் மாவட்டத்தில் மே 24 (நாளை) முதல் ஜமா பந்தி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் ஜமாபந்தி வரு கிற மே 24 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்கள் மற் றும் பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் அளிக்கலாம். அதன் படி ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத் தலைமையில் வரும் மே 24, 25 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைபெற உள்ளது. பல்லடம் தாசில் தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையில் வரும் மே 24 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரையும், அவிநாசி தாசில்தார் அலுவலகத்தில் திருப்பூர் வருவாய் அலுவலர் தலைமையில் மே 24 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரையும், திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அதிகாரி தலைமையில் மே 24, 25 ஆகிய தேதிகளிலும், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவல கத்தில் மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் மே 24 ஆம் தேதி முதல் மே 26 தேதி வரையிலும் ஜமாபந்தி நடை பெற உள்ளது. காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தாராபுரம் வரு வாய் அலுவலர் தலைமையில் மே 24 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரையும், தாராபுரம் தாசில்தார் அலுவலகத் தில் திருப்பூர் உதவி ஆணையாளர் (கலால்) தலைமை யில் மே 24 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரையும் (விடுமுறை நாட்கள், திங்கட்கிழமை தவிர), உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் உடுமலை வருவாய் அலுவ லர் தலைமையில் மே 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரையும் (விடுமுறை நாட்கள், திங்கட்கிழமை தவிர), மடத் துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி தலைமையில் வரு கிற மே 24, மே 25 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள் ளார்.
மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரம்
உடுமலை, மே 22- உடுமலை வட்டாரப்பகுதிகளில் மக்காச்சோளம் அறு வடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டார பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பிஏபி முதல் மண்டல பாசன பகுதிகள், அமராவதி பாசனப்பகுதி கள், இறவை, மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப் பட்ட மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநில வரத்து இல்லாதது மற்றும் மகசூல் குறைவு காரணமாக மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதுகுறித்து மக்காச்சோள விவசாயிகள் கூறுகையில், மக்காச்சோளம் சாகுபடியில் ஏக்கருக்கு 40 குவிண்டால் வரை மகசூல் காணப்படும். தற்போது ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் மட்டுமே மகசூல் காணப்படுகிறது. இதனால் விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு பயனில்லை. எனவே, அரசு ஆதார விலை நிர்ணயித்து, மக்காச்சோளம் கொள்முதல் செய்ய வேண்டும். இப்பகுதிகளில் மகசூல் குறைவுக்கான காரணங்கள் ஆய்வு செய்து, உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரத்தில் வேன் மோதி வடமாநில வாலிபர் பலி - 3 பேர் படுகாயம்
திருப்பூர், மே 22- மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த வர் தனஞ்செய்வர்மா (21), தனது நண்பர்களான சசிகான் (25), இப்ரா ஹிம் (23), ஜூனவால ஹோஜபாய் (33) ஆகியோருடன் கோவையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்த னர். இந்நிலையில், சனியன்று 4 பேரும் ஒரு வேனில் பொள்ளாச்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது பல்ல டம் – பொள்ளாச்சி சாலையில், காம நாயக்கன்பாளையம் அருகே ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பா ராதவிதமாக வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனஞ்செய் வர்மா சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். மேலும், பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
தீயில் கருகி 3 ஏக்கர் கரும்பு, 100 தென்னை மரங்கள் சேதம்
திருப்பூர், மே 22- மடத்துக்குளம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள், 100 தென்னை மரங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கிருஷ்ணா புரம் சுற்றுப்பகுதியில் பலநூறு ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில் கரும்பு, தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது. இதில், அமராவதி கிளை வாய்க்காலுக்கு அருகில் மாணிக்கம் என்பவர், தனக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு இவ ரது நிலத்தில் கரும்பு அறுவடை தொடங்கி நடந்தது. இத னால் அறுவடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் காய்ந்த சருகு களும், அருகில் அறுவடைக்கு தயாரான கரும்புகளும் இருந் தன. இந்நிலையில், சனியன்று இந்த விளை நிலத்தில் திடீ ரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும், தீ மளமள வென்று பரவி எரியத் தொடங்கியதால், அருகிலிருந்த குண சேகரன் என்பவரது தோட்டத்திற்கும் தீ பரவியது. இதில், அங்கிருந்த தென்னைமரங்களில் தீப்பிடித்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடுமலை தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு முன்பாகவே 3 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் எரிந்து சாம்பலானது. மேலும், இந்த விளைநிலத் திற்கு குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மின்கம்பிகள் மீது தீ பரவியதால் மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு விளைநிலத்தில் மீது விழுந்தன. இதையடுத்து மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து இந்த மின்கம்பிகளை அப்புறப்படுத்திய தோடு, புதிய கம்பிகளை இணைத்து மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்பின் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகே மின்விநியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், இந்த தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. இவ்விபத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய நிவார ணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்தடை
திருப்பூர், மே 22- திருப்பூர் துணை மின் நிலையத்தில் ராம்நகர் பீடர் மற்றும் ஓடக்காடு பீடர் பகுதி களில் மே 23 ஆம் தேதியன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் குமார் நகர், ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், இந்திரா நகர், இட் டேரி ரோடு, போஸ்டல் காலனி, அவிநாசி சாலை, புஸ்பா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் திங்களன்று மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோ கம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.