districts

img

விளைநிலங்களுக்கு குடிநீரை பயன்படுத்துவதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

உடுமலை, பிப்.13- உடுமலை ஒன்றிய பகுதியில் குடி நீர் இணைப்புகளை முறைகேடாக விளைநிலங்களுக்கு பயன்படுத்து வதை தடுத்து நிறுத்தி, பொது மக்க ளின் குடி நீர் தேவைக்கு பயன்படுத்த  வேண்டும் என உடுமலை ஒன்றிய  அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றிய கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்த னர். உடுமலை ஒன்றியக்குழு கூட்டத் தில், குறிச்சேரி ஊராட்சி பொது மக்க ளுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர்  இணைப்புகளை முறைகேடாக விளைநிலங்களில் பயன்படுத்துவ தும், தோட்டத்துச் சாலைகளுக்கு பெற்ற இணைப்புகளில் செல்லும் குடிநீர் முழுவதும் தென்னை மரங்க ளுக்கு பயன்படுத்தி வருவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டினர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்,  குற்றச்சாட்டு குறித்து உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும், ஊராட்சி குடியிருப்பு பகுதி யில் இருக்கும் வீடுகளுக்கு மட்டுமே  குடிநீர் இணைப்பு தர வேண்டும் என வும் மற்ற பகுதியில் குடிநீர் இணைப்பு  இருந்தால் உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்றார். பின்னர் ஆண்டியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாண வர்கள் பயன்படுத்தும் கழிவறை கட்டி டம் பழுதடைந்து உள்ளதை சரி  செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை உடனடியாக ஆய்வு செய்ய  அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட் டது. மேலும் ஊராட்சி பகுதியில் நில வும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய  வேண்டும் எனவும், குடிநீர் வடிகால் துறையில் கூடுதல் வேலை ஆட் களை நியமனம் செய்ய வேண்டும்.  தற்பொழுது கட்டுமான பொருட் களின் விலை உயர்வு ஏற்பட்டு உள் ளதை காரணம் காட்டி ஊராட்சி பகு தியில் நடைபெற்று வரும் பணிகளை  நிறுத்தாமல், தடையின்றி பணிகளை  தொடர வேண்டும் என்று கோரிக்கை  வைக்கப்பட்டது. மேலும், ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகள் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வது இல்லை. தமிழக அரசின் திட்டங் களை பொது மக்களுக்கு கொண்டு  செல்வது இல்லை. உறுப்பினர்களுக்கு கூட்டப்படியை பல மாதங்கள் தரா மல் உள்ளனர். அதிகாரிகளின் நடவ டிக்கையை கண்டித்து கூட்டத்தில் கலந்து கொள்ளாமல்  வெளிநடப்பு செய்தோம். இருந்தும் இன்றைய கூட்டம் நடக்கும் வரை அதிகாரிகள் தங்களின் நடவடிக்கையை மாற்ற  வில்லை. உறுப்பினர்கள் அனைவ ரும் அதிகாரிகளின் நடவடிக்கை கண் டித்து போராட்டம் நடத்துவோம் என் றனர். பின்னர் ஒன்றிய பகுதியில் புதிய  நலத்திட்ட வேலைகள் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  ஒன்றியக் குழு தலைவர் மகா லட்சுமி முருகன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் பியூலா எப்சிபாய்  மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.