districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு

பொறியாளர், மனைவிக்கு சிறை - அபராதம்

ஈரோடு, நவ.30- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வுபெற்ற மின்வாரிய முதன்மைப் பொறியாளர் மற்றும்  அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.  1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வா யன்று தீர்ப்பளித்தது.  ஈரோடு மின்சார வாரியத்தில் முதன்மைப் பொறியாள ராக(சிவில்) கே.ஜி.நடேசன் (67). இவர் 1996ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய போது வருமா னத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.  இதையடுத்து, கடந்த 2008 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீ சார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், நடேசன் வருமானத்துக்கு அதிக மாக அவரது பெயரிலும், தனியார் கல்லூரி பேராசிரியரான அவரது மனைவி மல்லிகா (65) பெயரிலும் ரூ.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சேர்த்திருப்பது உறுதி  செய்யப்பட்டது. இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடேசன்  மீதும், உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா மீதும்  வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு தலைமை குற்றவியல்  நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணன் முன்னி லையில் நடைபெற்றது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த  நிலையில் நீதிபதி செவ்வாயன்று தீா்ப்பளித்தார். அதில் அரசுப் பணியை தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்த  நடேசன், அவருக்கு உடந்தையாக இருந்த மல்லிகா ஆகி யோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா  ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி அபராதமும் விதித் தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுத லாக இருவரும் தலா ஒரு வருடம் சிறைத் தண்டனை அனு பவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தீா்ப்பினைத் தொடர்ந்து நடேசன், மல்லிகாவை கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு - 20 ஆண்டு சிறை தண்டனை

நாமக்கல், நவ.30- 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி  உள்ளது.  திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா அம்மாபட்டிசாலை  பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (31). இவர் மோகனூர் அருகே சொட்டையன்புதூர் பகுதியில் கோழிப்பண்ணையில் வேலை  செய்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு 14 வயது சிறுமியை பாலியல்  வன்கொடுமை செய்தது குறித்து மோகனூர் காவல் நிலை யத்தில் புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷை  கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாயன்று விசாரணை  முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட தொழி லாளி சுரேசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்  ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுரேஷ் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.

போதை மாத்திரை கேட்டு மருந்து கடை  உரிமையாளர் மீது தாக்குதல்: இருவர் கைது

திருப்பூர், நவ. 30 - திருப்பூரில் போதை மாத்திரை கேட்டு மருந்துக் கடை உரி மையாளரை தாக்கிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட எஸ்.வி.காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே விக்னேஷ் என்பவர்  மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். திங்களன்று இரவு  இவரது மருந்து கடைக்கு சென்ற இளைஞர்கள் இருவர்  போதை மாத்திரை கேட்டு இவரிடம் தகராறு செய்துள்ளனர்.  ஆனால் மருத்துவரின்  பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் தர முடியாது  என தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே மது போதையில்  இருந்த இளைஞர்கள் விக்னேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட் டனர்.   அப்போது கடையில் இருந்த அவரது தந்தை தண்ட பாணி, போதை இளைஞர்கள் தகராறு செய்வதால் சமாதா னம் செய்யும் விதமாக தனது மகனை வீட்டிற்கு செல்லும்படி  கூறி அனுப்பி வைத்தார். பின்னர் அவசரமாக கடையை மூடி விட்டு வெளியேறியபோது அந்த இளைஞர்கள் தண்டபா ணியை வழிமறித்து அவரை இருசக்கர வாகனத்தில் இருந்து  கீழே தள்ளி, மூர்க்கத்தனமாக தாக்கினார்.  அவர்களிடம் இருந்து தண்டபாணி தப்ப முயன்றபோ தும் அவர்கள் விடாமல் தாக்கினர். வெளியே சென்ற விக்னேஷ் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவ லர்களை அழைத்து வந்து தனது தந்தையை அவர்களிடம்  இருந்து மீட்டார்.எனினும் இளைஞர்கள் தாக்குதலில்  பலத்த காயமடைந்த தண்டபாணி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை பிடித்த   வடக்கு காவல் நிலைய போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். போதை மாத்திரை கேட்டு கொடுக்காத  மருந்தக உரிமையாளரை இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலையில்லா தேய்ப்பு பெட்டி விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர், நவ. 30 - திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த மக்கள் விதிமுறை களைப் பின்பற்றி விலையில்லா தேய்ப்பு பெட்டி (அயர்ன்  பாக்ஸ்) பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் கூறியிருக்கிறார். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகா மல் இருக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே விலையில்லா தேய்ப்பு பெட்டி வழங்கப்படும். கடந்த 10 ஆண் டிற்குள் திருப்பூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் விலையில்லா தேய்ப்பு பெட்டி பெற்றிருக்க கூடாது. சாதிச்சான்று, ஆதார்  நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் (2), இதுவரை விலை யில்லா தேய்ப்பு பெட்டி பெறவில்லை என்று கிராம நிர்வாக  அலுவலரிடம் பெற்ற சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க  வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திருப்பூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த திட்டத்தில்  பயன்பெற விரும்புவோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை, தொலைபேசி  எண்: 0421-2999130, மின்னஞ்சல் முகவரி:dbcwotpr@gmail. com வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 ஆம் தேதி 10 ரெயில்கள் ரத்து

திருப்பூர், நவ.30- சேலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் வருகிற 3ஆம் தேதி 10 ரெயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன என்று சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பி–ரஸ்  ரெயில் 3 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து  புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் சென்னை  சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 3 ஆம்  தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்ப டுவது ரத்து செய்யப்படுகிறது.  சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3 ஆம் தேதி காலை  6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3 ஆம் தேதி  மதியம் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து  செய்யப்படுகிறது.  சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி எக்ஸ்பி–ரஸ்  ரெயில் 3 ஆம் தேதி காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ர லில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல்  கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்  3 ஆம் தேதி மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்ப டுவது ரத்து செய்யப்படுகிறது.  கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ் பிரஸ் ரெயில் 3 ஆம் தேதி காலை 5.45 மணிக்கு கோவை யில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. மேலும்  கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கோவை செல்லும் உதய எக்ஸ்பி ரஸ் ரெயில் 3 ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு பெங்களூரு வில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.  கே.எஸ்.ஆர். பெங்களுரு-எர்ணாகுளம் எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3 ஆம் தேதி காலை 6.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல்  எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களுரு செல்லும் எக்ஸ்பி ரஸ் ரெயில் 3ஆம் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகு ளத்தில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. என்று 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) காலை நேர தொடர் வகுப்பு

அரசியல் சாசன விழுமியங்களும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் 02.12.2022 வெள்ளிக்கிழமை காலை 6.30 - 7.30 மணி தலைப்பு: மதச்சார்பற்ற அரசியல் சாசனமும்,  வகுப்புவாத அச்சுறுத்தலும்   கருத்துரை: இரா.சிந்தன்

பள்ளி ஆய்வுகளில் மாதிரி தேர்வு

திருப்பூர், நவ.30- தமிழகத்தில் உள்ள அரசு  பள்ளிகளில் கற்றல், கற்பித் தல் பணிகள் முறையாக நடக் கிறதா என்பதை தெரிந்து கொள்ள மாதந்தோறும் மண்டல ஆய்வு கூட்டங்கள் நடத்தப் படுகின்றன.  இந்நிலையில் மண்டல அளவிலான ஆய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள், அதி காரிகள் குழுவினர், மாண வர்களுக்கு அவர்களின் வகுப்புக்கு ஏற்ற பாடத் திட் டத்தில் இருந்து, குறு வினாக் கள் அடங்கிய மாதிரி தேர்வு  நடத்தும்படி பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.  இந்த மாதிரி தேர்வு வழியே மாணவர்களின் கற் றல் திறனை எளிதில் அறிய முடியும். மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல் முறைகளை வரையறுக்க முடியும் என திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வி அதி காரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி விளம்பரமும் தமிழுக்கு மாற்றம்

திருப்பூர், நவ. 30 - திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி யில் வைக்கப்பட்டிருந்த வணக்கம் காசி  விளம்பரம் தமிழ் மொழிக்கு மாற்றப்பட் டது.  திருப்பூர் ரயில் நிலையத்தில் காசி  தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான விளம்ப ரம் இந்தி மொழியில் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தக வல் மையம் பகுதியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்த தலைப்பை மறைத்து இந்தியில் சகயோக் என எழு திய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இது ஊட கங்களில் செய்தியாக பரவி கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் செவ் வாயன்று அந்த ஸ்டிக்கர் கிழித்து அகற் றப்பட்டது. இந்நிலையில் காசி தமிழ்ச் சங்கமம்  விளம்பரம் இந்தியில் வைக்கப்பட்டி ருந்ததும், பார்வையாளர்களிடம் அதி ருப்தியை ஏற்படுத்தியது. மத்திய அரசு  தமிழ் மொழி மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் இந் திக்கு முன்னுரிமை கொடுப்பதை இத்த கைய செயல் அம்பல்படுத்தி வரு கிறது. ஒன்றிய அரசின் பாசாங்குத்தனம் அம்பலமான நிலையில் காசி தமிழ்ச் சங் கமத்திற்கு திருப்பூர் ரயில் நிலையத் தில் இந்தி மொழியில் வைக்கப்பட்ட விளம்பர பதாகையும் அகற்றப்பட்டது.வணக்கம் காசி என தமிழில் விளம் பரம் மாற்றம் செய்யப்பட்டு அதே இடத் தில் வைக்கப்பட்டது.

இலவச வீட்டுமனை பட்டா  வழங்க கோரி மனு

அவிநாசி,நவ.30- அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் உட்பட அருகே  உள்ள கிராம மக்கள் பட்டா கேட்டு அவிநாசி தாலூகா  அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர் அவிநாசி ஒன்றியம் நம்பியாம்பாளையம், கரையப்பா ளையம், ஆலாங்காட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில்  சுமார் 60 ஆண்டுகளாக ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும் பங்களாக வசித்து வருகின்றனர். இந்நிலையில்  மூன்று ஊர்க ளில் வசிக்கும் மக்கள் 120 குடும்பங்கள் சுமார் 25 ஆண்டுகளாக  பட்டா கேட்டு போராடி வருகின்றனர். இதில் நம்பியாம்பா ளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட உருமங்குட்டை க.ச.எண்.  99/2 எண்ணுள்ள நிபந்தனை பட்டா நிலம் 3.20 ஏக்கர் கடந்த  காலங்களில் யாரும் பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக  இருந்துவருகிறது. நிபந்தனை பட்டாவை ரத்து செய்து  இந்த இடத்தை கடந்த 25 ஆண்டுகளாக பட்டா கேட்டு  போராடி வருகின்ற  குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை  பட்டாவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி   அவிநாசி  தாலூகா அலுவலகத்தை , அவிநாசி வட்டாட்சியர் ராஜேசிடம்,  தலித் விடுதலைக்கட்சி மாநில பொது செயலாளர் செங்கோட் டையன், இணை பொது செயலாளர் சகுந்தலாதங்கராஜ்,  மாநில தலைமை நிலைய செயலாளர் மூர்த்தி, தலித் விடுத லைக்கட்சி நிர்வாகி விடுதலைச்செல்வன், மேற்கு மண்டல  செயலாளர் செல்வன், மாவட்ட செயலாளர் பூங்கொடி ஆகி யோர், கிராம மக்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.  இம்மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ராஜேஸ்  கூறுகையில், மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட் சியர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசென்று, வரு வாய்த்துறை மூலமாக நில எடுப்புசெய்து, விரைவில்  கிராம மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும்.என்றார்.

4 மாதங்களாக பென்சன் நிறுத்தப்பட்டதால் முதியோர் அவதி மாவட்ட ஆட்சியர் தலையிடக்கோரி சிஐடியு மனு

தாராபுரம், நவ. 30- தாராபுரம் பகுதியில் அமைப்பு சாரா நல வாரிய பென்சன் 4 மாதங்களாக நிறுத்தப்பட் டுள்ளதால் முதியோர் தவித்து வருகின்றனர்.  மாவட்ட ஆட்சியர் தலையிடவேண்டும் என  கோரி சிஐடியூ சார்பில் மனு அனுப்பப்பட் டுள்ளது. பொது தொழிலாளர் சங்க தாராபுரம் தாலூகா செயலாளர் பி.பொன்னுச்சாமி திருப் பூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை  அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அமைப்பு  சாரா நலவாரியத்தில் இருந்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 1000 பென்சனாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை முதியவர்களின் மருத்துவ செலவிற்கு ஒரளவு உதவியாக உள்ளது.  இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக பென் சன் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நல வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இன்று வரை பென் சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதன் காரணமாக முதியவர்கள் குறிப்பாக 70 வயதை கடந்தவர்கள் மிக வும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே  உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும்  நிலையில் தற்போது வழங்கப்பட்டு வரும்  ரூ.1000 நிறுத்தப்பட்டுள்ளது வேதனைய ளிப்பதாக உள்ளது. எனவே மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு நிலுவையில் உள்ள உதவித் தொகையை ஒரே தவணையில் வழங்கவும்  மாதந்தோறும் தொடர்ந்து குறிபிட்ட தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் காயம்

உதகை, நவ.30- உதகை தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் கொட்டி யதில் கேரள பள்ளி மாணவர்கள் 11 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம், திருச்சூரிலிருந்து பள்ளி மாணவ, மாண விகள் மற்றும் ஆசிரியர்கள் நீலகிரி மாவட்டம், உதகைக்கு சுற்றுலா வந்தனர். உதகையில் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர்கள், அரசு தாவரவியல் பூங்காவுக்கு  வந்தனர். அப்போது அங்கிருந்த தேன்கூடு களைக்கப்பட்ட தாக தெரிகிறது. இதையடுத்து தேனீக்கள் கூட்டம் படை யெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை கொட்ட தொடங் கியது. கேரளாவிலிருந்து வந்த மாணவ, மாணவிகள், ஆசி ரியர்களை தேனீக்கள் கொட்டியது. மேலும், அவர்கள் பாது காப்பான இடங்களுக்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டனர். அப் போது சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தேனீக்களி டமிருந்து தப்பிக்க இத்தாலியன் பூங்கா பகுதியில் இருந்த குட்டையில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்த 11  பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட் டது. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் சிகிச்சை முடிந்து 11 பேரும் சொந்த ஊருக்கு  திரும்பினர். இதற்கிடையே தேனீக்கள் இருந்த கூட்டை  கலைத்தது யார்? என்று தாவரவியல் பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

சேலம், நவ.30- சேலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் பூமி அதிகளவில் மாசடை கிறது. பொதுமக்கள் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்  விஷமாக மாறி மண்ணின் தன்மையை மாற்றி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தன்னார்வ அமைப் பின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதி யாக சேலம் குரங்குச்சாவடி பகுதியில் செந்தில் பப்ளிக் பள்ளியின் சார்பில் பிளாஸ்டிகை தவிர்த்து, துணி பையை உப யோகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.  இப்பேரணியை சூரமங்கலம் காவல் ஆய்வாளர் சிவ குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். குரங்குச்சாவடி பகு தியில் தொடங்கிய இந்த பேரணி ஐந்து ரோடு, ஏவிஆர் ரவுண் டானா, மாமாங்கம் சாலை வழியாக மீண்டும் குரங்குச்சாவடி பகுதியில் நிறைவு பெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

செல்போன்கள் கொள்ளை

சூலூர், நவ.30- சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான செல் போன்களை பொருட்கள் கொள்ளையடித்து சென்ற அடை யாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வரு கின்றனர். கோவை மாவட்டம்,  சுல்தான்பேட்டையை அடுத்த குளத் துத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (65). இவர் கடந்த சில ஆண்டுகளாக சுல்தான்பேட்டை அருகே உள்ள  செஞ்சேரிமலை கோவில் அடிவாரத்தில் இரண்டு கடைகளை வாடகைக்கு எடுத்து அதில் செல்போன் மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.  இந்நிலையில், உடல்நலகுறைபாடு காரணமாக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந் துள்ளார். இதனிடையே சுப்பிரமணியத்தின் கடையின் பூட்டு  உடைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனது கடைக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது கடைக்கு வேறு பூட்டு போடப்பட்டு இருந்தது. இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்தபோது, சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான செல் போன்கள், உதிரிபாகங்கள், பேன்சி பொருட்கள், கவரிங் நகைகள் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சுப்பிரமணியம் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையி னர் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை நடத்தி, கொள்ளை யர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏரியில் மிதந்த பெண் சிசு

பென்னாகரம், நவ.30- பென்னாகரம் அருகே பெண் சிசுவை மர்ம நபர்கள் ஏரி யில் வீசி சென்றுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூக் குட்டமருத அள்ளி  ஊராட்சிக்கு உட்பட்ட நாய்கனூர் ஏரியில் பெண் சிசுவை அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றுள் ளனர். இந்நிலையில் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் கள் கண்டு பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஏரியில் மிதந்த சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த பெண் சிசு குறித்தும், ஏரியில் வீசி சென்ற  அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

உதகை, நவ.30- கீழ் கோத்தகிரியில் பெய்த பலத்த மழையால், பழங்குடி யின கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. இத னால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அத்தி யூர் மட்டம் அருகே சீனிமட்டம் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாது காப்பு கருதி அரசு பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. கடினமாலா கிராமத்தில் இருந்து கரிக்கையூர் செல் லும் மாற்றுச் சாலையில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட் டது. தேனாடு அருகே கரக்கோடுமட்டம் கிராமத்தில் 2 வீடு களுக்குள் மழைநீர் புகுந்தது. பலத்த மழை காரணமாக வீட் டின் சுவர்களில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக கடினமா லாவை சேர்ந்த சிந்தாமணி, பார்வதி, ராஜூ மற்றும் அரக்கோடு மல்லிகொம்பை கிராமத்தில் 2 பேர் என 5 வீடுகள் இடிந்து  விழுந்து சேதமடைந்தன. கடினமாலாவில் நஞ்சுண்டன் என்ப வரது வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது.

நலத்திட்ட உதவிகள்

ஈரோடு, நவ.30- ஈரோடு மாவட்டத்தில், தொழிலாளர் நல வாரியத் தில், ஒரு லட்சத்து 2 ஆயி ரத்து 10 பேர் பதிவு செய்யப் பட்டுள்ளனர். இதில் கட்டு மான தொழிலாளர் நலவாரி யத்தில் 2163 பேரும், அமைப்பு சாரா வாரியத்தில் 3297 பேரும், அமைப்புசாரா ஓட்டு நர் நலவாரியத்தில் 234 பேர்  என மொத்தம் 5,808 பேர் ஓய் வூதியம் பெற்று வருகின்ற னர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், நம்பியூரில் செவ் வாயன்று நடைபெற்ற நிகழ்ச் சியில் 147 தொழிலாளர்க ளுக்கு ரூ.81 ஆயிரத்து 600  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட் டது.