பள்ளிபாளையம், ஏப்.5- முன் எப்போதும் இல்லாத அள விற்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதன்கார ணமாக பழுதான மின் விசிறிகளை சரிசெய்ய, பழுது நீக்கும் கடை களில் மக்கள் குவிகின்றனர். சூழலியல் மாறுபாட்டால், பருவ நிலையும் மாறி மாறி வரு கிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதம்தான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்கிற நிலையில், இந்த வருடம் பிப்ரவரி மாதத்தி லேயே வெயிலின் தாக்கம் அதி கரித்துள்ளது. தற்போது ஏப்ரல் மாத துவங்கி யுள்ள நிலையில், வெப்பத்தின் உச்சம் ஆளை ஆம்லெட் போடும் அளவிற்கு தாக்கம் உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். இந்நிலை யில், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குறைந்தபட்சம் தற்காத் துக்கொள்ள ஏசி, ஏர்கூலர், மின் விசிறியை பயன்படுத்துகின்றனர். அறைக்கு ஒரு மின்விசிறி என்பது மாறி ஆளுக்கு ஒரு மின் விசிறி தேவை என்பதாய் சூரியன் சுட்டு எரிக்கிற நிலையில், பழுதான மின் விசிறிகளை சரி செய்ய மக்கள் பழுது நீக்கும் கடைகளுக்கு படை யெடுத்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் பகுதியில், ஏராளமான மிக்சி, ஃபேன் உள்ளிட்ட எலக்ட் ரானிக் பொருட்களை பழுது நீக்கி சரி செய்து தரும் கடைகள் இயங்கி வருகிறது. தற்போது வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு பழுத டைந்த மின்விசிறிகளை, வாடிக் கையாளர்கள் கொண்டு வருவதாக கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சூழலியல் ஆர் வலர் ஒருவர் கூறுகையில், சாலை விரிவாக்கம், மேம்பால பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக் காக, சாலையோர மரங்கள் அதிக ளவு வெட்டப்பட்டுள்ளது. இதில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு சாலையில் கூட சாலை விரிவாக பணிகளுக்காக அதிகளவு மரங் கள் வெட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறதது. நமது ஊரிலே இப்படி இருக்கிறது என் றால், தமிழகத்தின் வறட்சியான மாவட்டங்களை நினைத்து பாருங் கள். வீடு தோறும் மரம் வளருங் கள் தூய காற்று கிடைக்கும் என முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் இன்று சாலையோர மரங் கள் பெரும்பாலும் மரணித்துவிட்ட நிலையில், நல்ல காற்றை தேடி சர்வீஸ் சென்டர்களுக்கு மின்விசிறி களுடன் படையெடுத்துக் கொண்டி ருக்கிறார்கள் நம் மக்கள் என்றார். பள்ளிபாளையம்- திருச் செங்கோடு சாலையில் சர்வீஸ் சென்டர் கடை வைத்திருப்பவர் கூறுகையில், இந்தாண்டு எங்க ளுக்கே ஆச்சரியமாக உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவு மின்விசிறிகள் பழுதடைந்துள்ளதாக, வாடிக்கை யாளர்கள் பழைய மின்விசிறிகள் எங்களிடம் கொண்டு வந்து சரி செய்து தருமாறு கூறுகிறார்கள். அதே நேரத்தில் சீலிங் ஃபேன் களை காட்டிலும், டேபிள் ஃபேன் களே அதிகளவு பழுது நீக்கி தரு மாறு கடைக்கு வாடிக்கை யாளர்கள் கொண்டு வருகின்றனர். பெரும்பாலானோர் டேபிள் ஃபேன் களை முறையாக பராமரிப்பது கிடையாது.
கைக்கு எட்டும் தூரத் தில் உள்ளதால், வீட்டில் உள்ள குழந்தைகள் விளையாடும் விளை யாட்டுப் பொருளாகவும் பெரும் பாலான நேரங்களில் டேபிள் ஃபேன் மாறிவிடுகிறது. இதன் காரணமாக குளிர்காலங்களில் மின்விசிறிகள் தேவை பெரும் பாலும் தேவைப்படுவதில்லை என்பதால், டேபிள் பேன், டவர் ஃபேன் உள்ளிட்ட மின்விசிறி சாத னங்களை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏதோ ஒரு மூலையில் போட்டு முடக்கி வைத்து விடு கிறார்கள். கோடை காலம் நெருங்கினால், அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாகவும் பொதுமக்கள் புழுக்கத்தில் தவிக்கின்றனர். தங்கள் வீடுகளில் உள்ள ஓரளவு செயல்படும், செயல்படாத என இரண்டு வகையான டேபிள் ஃபேன் உள்ளிட்ட மின்விசிறிகளை எங்க ளிடம் கொண்டு வந்து சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறார்கள். நாங்களும், இதில் எங்களால் முடிந்தவரை சர்வீஸ் செய்து கொடுக்கிறோம். பெரும்பாலும் மின்விசிறிகளில் காயில் பிரச்சனை அதிகமாக உள்ளது. மேலும், குப்பை தூசி, படிந்து பராம ரிப்பு இல்லாத நிலையில் வைத் திருப்பதால் பழுதடைந்த மின் விசிறிகளை சரி செய்வதும் சவா லாகவே உள்ளது. இருப்பினும், பழுது நீக்க படையெடுக்கிற மக்களின் நிலையை அறிந்து இரவு, பகல் பாராமல் பழுது நீக்கி தரு கிறோம் என்றார்.