districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிறுபான்மை மக்கள் தொகைக்கேற்ப இடுகாடு தேவை

ஈரோடு, நவ. 25- சிறுபான்மை மக்கள் தொகைக்கேற்ப இடுகாடு வசதியை  செய்து தரப்பட வேண்டும் என சிறுபான்மையின ஆணை யத்தில் மக்கள் நலக்குழுவினர் முறையிட்டனர்.  தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையக்குழு வெள்ளி யன்று ஈரோடு வருகை தந்தது. இக்குழு மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையின மக்கள் பிரதி நிதிகள் மற்றும் சமுதாய தலைவர்களைச் சந்தித்து அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது. இதில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட செயலாளர் ப.மாரிமுத்து, பொருளாளர்  கு.நடராஜன் மற்றும் ஹாத்திம்தாய் ஆகியோர் கலந்து  கொண்டு மனு கொடுத்தனர். அம்மனுவில் தெரிவித்துள்ள தாவது, ஈரோடு மாநகரில் சிறுபான்மையினர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்  இல்லை. இதனால் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சிறுபான்மை  மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, மாநகர் அல்லது  அருகாமையில் இடம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.  இதேபோன்று மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் சிறு பான்மையின மக்கள் தொகைக்கேற்ப கல்லறைத்தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் வசதிகளை செய்து தரப்பட வேண்டும்  என அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

தருமபுரி, நவ.25- அரசுப் பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர் களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பயிலும், மாணவ-மாணவிகளுக்கு, மருத்துவக் கல்வி, ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங் களில் சேருவதற்கான நுழைவு, தகுதித் தேர்வு எழுது வதற்கு தயார்படுத்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள் புதனன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 13  சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன. தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் கு.குணசேகரன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி  வைத்தார். இதில் பள்ளித் தலைமை ஆசிரியை கு.தெரசாள்,  பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஆா்.சுபத்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர். 

தந்தை அடித்துக் கொலை

பென்னாகரம், நவ. 25 - தந்தையை மகன் கட்டையால் அடித்து கொலை செய் யப்பட்ட சம்பவம் பென்னாகரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே  உள்ள மலையனூர் பகுதியை சேர்ந்தவர் குமரன் (70) கூலித் தொழிலாளி.  இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், குணசேகரன், தங்கராஜ்  என இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது.  இந்நிலையில் தங்கராஜ் (40) லாரி உரிமையாளராக  உள்ளார்.  தற்போது தங்கராஜ் புதியதாக வீடு கட்டி வரு கிறார். இதில் வீடு கட்டு தர ஒப்பந்தம் போட்ட ஒப்பந்ததாரர் உரிய நேரத்தில் வேலையை முடித்து தரவில்லை என கூறப் படுகிறது, இதுகுறித்து ஒப்பந்ததாரருடன் தகராறில் ஈடுபட்டு  வந்துள்ளார். இந்நிலையில் தங்கராஜன் தந்தை குமரன் ஒப்பந்த தாரருக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால்  கடந்த மூன்று நாட்களாக கடும் கோபத்துடன், மனநலம்  பாதித்தவர் போல் சுற்றி திரிந்துள்ளார் தங்கராஜ். இந் நிலையில் வெள்ளியன்று அமைதியாக இருக்கும்படி கூறிய  தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.  மேலும், சாலையில் சென்ற வாகனங்களையும் அடித்துள் ளார். இதில்,சாலையில் சென்ற பால் வண்டி ஓட்டுநர் காயம டைந்தார். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் தங்கராஜை பிடித்து கட்டிவைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏரியூர்  போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். மகனே தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம்  பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணி வாய்ப்பு

ஈரோ, நவ. 25- ஈரோடு மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அல கிற்கு ஒப்பந்த அடிப்படை யில் முற்றிலும் தற்காலி கமாக பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகிறது. இப்பணியிடம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தொகுப்பூதியமாக மாதம் ரூ.27 ஆயிரத்து 804 வழங்கப் படும்.  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள், பொது நிர்வா கம், உளவியல், சட்டம், பொது சுகாதாரம் அல்லது சமூக வளமுகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றி ருக்க வேண்டும்.  விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் erode.nic.in என்ற இணையதளத்தில் பதிவறக் கம் செய்து கொள்ளலாம். 

பகலில் நடமாடிய காட்டு யானை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப் பகுதியில் அரேப்பாளையம் கிராமம் உள்ளது. வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வனப் பகுதி என்பதால் இரவு  நேரங்களில் இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், வனப் பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை பகல் நேரத்தில்  அரேப்பாளையம் கிராமத்தில் நுழைந்தது. காட்டு யானை குடியிருப்பு பகுதியில் நடமா டுவதைக் கண்ட மலைக் கிராம மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த ஆசனூர் வனத்  துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீண்டும் வனப் பகுதியை விட்டு யானை வெளி யேறுவதை கண்காணித்தனர். 

இடுவாய் அரசுப் பள்ளிக்கு  ரூ.50 ஆயிரத்தில் உபகரணங்கள் 

திருப்பூர், நவ. 25 - இடுவாய் அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்க ளுக்கு, எப்எல் டெக்ஸ்டைல் நிறுவனமும், இடுவாயில் உள்ள சாராஸ் கிளாத்திங் கம்பெனியும் இணைந்து ரூ.50 ஆயி ரம் மதிப்பில், குழந்தைகள் படிப்பதற்கு மேஜை, நாற்காலிகள்  வழங்கினர். திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் வெள்ளிக் கிழமை இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சிமன்றத் தலை வர் கே.கணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், எப்எல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன மேலாளர்கள், சாரா கிளாத்திங் நிறுவன உரிமையாளர் தன பால், வார்டு உறுப்பினர் பூபதி பிரகாஷ், சின்ன காளிபா ளையம் வெட்டுக்காடு நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அத்துடன் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளும் கலந்து கொண்ட னர். பள்ளிக்கு உதவி செய்த நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் பயனாடை அணிவித்தார். அவர் பேசும்போது, கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த நிறுவ னங்களின் சார்பாக ஆரம்பப் பள்ளிக்கு இரும்பு டேபிள்கள்  வழங்கும் நிகழ்வு நடைபெற்றதை நினைவு கூர்ந்ததுடன், பள் ளிக்குத் தேவையான உதவிகள் செய்ய மற்ற நிறுவனங்க ளும் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். பள்ளி ஆசிரி யர்கள் நன்றி தெரிவித்தனர்.

 அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:52.64/60அடி நீர்வரத்து:47கன அடி
வெளியேற்றம்:239கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்: 89.37/90அடி.நீர்வரத்து:608கனஅடி
வெளியேற்றம்:408கனஅடி

பருத்தி ஏலம்

திருப்பூர், நவ.25- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 73  லட்சத்துக்கு பருத்தி விற் பனை வியாழனன்று நடை பெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், திண் டுக்கல் உள்ளிட்ட மாவட்டங் களிலிருந்து 259 விவ சாயிகள் வந்திருந்தனர். மொத்த வரத்து 854 குவிண் டால் பருத்தி. 13 வணிகர்கள்  இதை வாங்குவதற்காக வந் திருந்தனர். மொத்தம்  ரூ. 73  லட்சத்திற்கு விற்பனை நடை பெற்றது.

பயிர் சாகுபடி குறித்து வாகன பரப்புரை 

திருப்பூர், நவ.25- வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், பயிர் சாகுபடி  குறித்த பரப்புரை வாகனத்தை, அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வெள்ளியன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றி யம், வேலாயுதகவுண்டன் புதூர், அய்யனூரில் வேளாண்மை  உழவர் நலத்துறையின் சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி குறித்த பரப்புரை  வாகனத்தை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட  இயக்குநர் அ.லட்சுமணன் தலைமையில் செய்தித்துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளியன்று துவக்கி வைத் தார். 

ரூ.5.40 கோடி நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகியும் அவிநாசியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டாதது ஏன்?

அவிநாசி, நவ.25- ரூ.5.40 கோடி நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகியும் அவிநாசியில் அவசர சிகிச்சை  பிரிவு கட்டாததை கண்டித்து, நவம்பர்  29ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபடபோவதாக, அவிநாசி நல்லது நண் பர்கள் அறக்கட்டளையினர் அறிவித்துள்ள னர். இது குறித்து அவிநாசி நல்லது நண்பர்கள்  அறக்கட்டளையினர் அவிநாசி காவல் துறை யினரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது, அவிநாசி புறநகர் பகுதியில் ஒரு லட்சத் திற்கும் அதிகமான மக்கள் உள்ளனர். தற் போது உள்ள அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி, மருத்துவர்கள், மருத்துவ  உபகரணங்கள் இல்லாததால் மக்கள் அவ சர காலத்தில் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசாங்கத் தால் 24 மணி நேரமும் செயல்படும் அவசர  சிகிச்சை பிரிவு (ட்ராமா கேர் சென்டர்)  அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்காக அவிநாசி புறவழிச்சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 40 படுக்கை வசதி  கொண்ட தாய் சேய் நலம் மற்றும் ஆய்வ கங்களுக்காக ரூ. 5 கோடியே 40 லட்சம் ஒதுக் கீடு செய்து அரசாணை வாழங்கப்பட்டது.  இருப்பினும் இதுவரை எந்தப் பணியும் அர சாங்கத்தால் நடைமுறைப் படுத்தபட வில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும்  வகையில், அவிநாசி பொதுமக்களின் சார் பில், நவ.29ஆம் தேதி அரசு மருத்துவமனை  முன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்  போராட்டம் மேற்கொள்ள காவல் துறை அனு மதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் பங்கேற்காத விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

சேலம், நவ.25- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருவதில்லை என சேலம் விவசாயிகள் குற் றஞ்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவ சாயிகள் தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  மேனகா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து  கொண்ட விவசாயிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் முக்கிய மான துறையை சேர்ந்த எந்தவொரு அதிகாரிகளும் பங்கேற்ப தில்லை. இதனால் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறை வேறாமல் அப்படியே உள்ளது என்றனர். மேலும், விவசாயி கள் விளைவிக்கும் பொருளை பேருந்தில் கொண்டு செல் கின்ற பொழுது அதிகப்படியான சுமை கட்டணங்கள் வசூலிக் கப்படுகிறது. அத்துடன் விவசாயிகளை ஏளனமாக பேசுவ தாகவும் குற்றஞ்சாட்டினர். இதற்காக மாவட்ட நிர்வாகம் விவ சாயிகள் கொண்டு செல்லும் பொருளுக்கு எவ்வளவு பணம் வாங்க வேண்டும் என்ற ஒரு வரையறை நிர்ணயித்து அந்த  விளைப்பொருட்களை சந்தைகளுக்கு எடுத்து செல்ல அனு மதி வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு விண் ணப்பிப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்க கிராம நிர்வாக  அலுவலர் உரிய சான்றிதழை வழங்காமல் அலைக்கழிப்ப தால்  திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

குற்றச்செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை கோவை எஸ்பி எச்சரிக்கை

கோவை, நவ.25- இளைஞர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கோவை காவல்துறை வேடிக்கை பார்க்காது. எந்த வயதினராக இருந் தாலும் நடவடிக்கை பாயும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையத்துக்குட்பட்ட  நீலாம்பூர் பகுதியில் புறக்காவல் நிலையம் புதிதாக அமைக் கப்பட்டு வியாழனன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த காவல் நிலையத்தை கோவை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பத்ரி நாராயணன் திறந்து வைத்தார். இதன்பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப் பாட்டு அறையையும் அவர் திறந்து வைத்தார்.   இதன்பின் செய்தியாளர்களிடம் பத்ரி நாராயணன் கூறு கையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குற்றங்களை குறைப்பதற்காகவும், கோவை மாநகருக்குள் நுழைவதற் கான முக்கியமான எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவி ரப்படுத்துவதற்காக புறக்காவல் நிலையங்கள் அமைக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது நீலாம்பூர்  புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை கோவை மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 220 பவுன்  நகைகள் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டு உரியவர்களி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் குற்றவாளி கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி காவல் துறை நடவடிக்கை எடுக்கும். கோவையில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தால் அவர்களை கண்டு கொள்ளாமல் கோவை காவல்துறை இருக்காது. குற்றவாளிகள் மீதான நடவடிக்கை தீவிரமாக இருக்கும். அதிகரிக்கும் இருசக்கர வாகனங்கள் திருட்டை  குறைப்பதற்காக இதுவரை 150 வழக்குகள் பதியப்பட்டுள் ளது. 120 இருசக்கர வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப் பட்டுள்ளது, என்றார்.

ஆட்சியருக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

உதகை, நவ.25- நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு செல் போன் குறுந்தகவல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் திற்கு கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று அடை யாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போன்  மூலம் குறுந்தகவல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ்  ராவத்திடம், ஆட்சியர் புகார் அளித்தார். இதை யடுத்து உதகை நகர் பகுதியில் சுற்றி திரிந்த வெளியூர்களில் இருந்து வந்த நபர்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உதகை மத்திய காவல் நிலைய ஆய்வாளர் மணி குமார் தலைமை யிலான போலீசார் தஞ்சாவூர் சென்று அவரை பிடித்தனர். இதையடுத்து நடைபெற்ற விசார ணையில், அவர் தில்லியை சேர்ந்த நிதின் சர்மா (40) என்பதும், நிதின் சர்மா செல்போன் களை திருடும் பழக்கம் உடையவர் என்றும், அவ்வாறு திருடப்படும் செல்போன்கள் மூலம் பலருக்கும் மிரட்டல் விடுத்ததும் தெரி யவந்தது.

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் கோவை மாவட்டத்தில் 11.64 கோடி பேர் பயன்

கோவை, நவ.25- பெண்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் பொரு ளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் சிறப்பு திட்டமான மகளிர் கட்டணமில் பேருந்து பயண திட்டத்தின் கீழ், கோவை  மாவட்டத்தில்  அரசு நகரப் பேருந்துகளில் 11.64 கோடி பேர் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிபொறுப்பேற்றவுடன் சாதாரண கட்டண  நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டமானது, மகளிர் உட்பட அனைத்து தரப் பினரிடமும், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத் தின் கீழ் கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை 2021 முதல்  செப்டம்பர் 2022 வரை சாதாரண கட்டண நகரப் பேருந்து களில் 11.57 கோடி மகளிரும், 5.75 லட்சம் மாற்றுத்திறனாளி களும், 32 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்க ளும், 66 ஆயிரம் திருநங்கைகள் என மொத்தம் 11.64 கோடி நபர் கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

போலீசாருக்கு பாராட்டு

கோவை, நவ.25- ஆன்லைன் மூலமாக  பணத்தை இழந்த நபர்கள்  மாவட்ட சைபர் கிரைம் காவல்  நிலையத்தில் அளித்த புகா ரையடுத்து பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவத்தார். மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 374 பணத்தை இழந்தவர்க ளுக்கு மீட்டுக் அவர்களு டைய வங்கி கணக்கிற்கு திரும் பப்பெற்றுக் கொடுத்தனர். துரிதமாக பணத்தை மீட்ட தற்கான ஆவண சான்றி தழை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் வெள்ளியன்று பாதிக்கப்பட்டவரிடம் வழங் கினார்.