திருப்பூர், நவ. 9- திருப்பூர் பி.என்.ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடத்தில் செயல்படும் நெசவாளர் காலனி பள்ளி மாணவர்களுக்கு விபத்து அச்சுறுத்தலில் இருந்து பாது காப்பு கோரி பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர். திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனியில் மாநக ராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின் றனர். பெருமாநல்லூர் சாலை மற்றும் குமரானந்தபுரம் சாலை, நெசவாளர் காலனி சாலை என நான்கு சாலை கள் சந்திக்கும் இடமாக இருப்பதால் இங்கு எப்போதும் கடு மையான போக்குவரத்து நெருக்கடி இருக்கும். குறிப்பாக காலை மாலை நேரங்களில் பள்ளிக்கு மாணவ மாணவி கள் வந்து செல்லும் பொழுது மிகுந்த நெருக்கடிக்கு இடை யே விபத்து நேரிடும் அச்சுறுத்தலோடு அவர்கள் வர வேண்டி இருக்கிறது. எனவே பள்ளி நேரத்தில் காலை மாலை இரு வேலையும் அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் அந்த இடத்தில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த உரிய தடுப்பு அரண்களோ அல்லது போக்குவரத்து காவலர்களோ இருப்பதில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வரும் வரை பதற்றத்துடனேயே இருக்க நேரிடு கிறது. இந்த நிலையில் புதன்கிழமை மாலை வழக்கம் போல் அந்த பள்ளியின் முன் பகுதியில் பெருமளவு போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரும் எவ்விதமான ஒழுங் கும் இன்றி தாறுமாறாக வாகனத்தை செலுத்திக் கொண்டி ருந்தனர். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் பிஎன் ரோடு நெசவாளர் காலனி சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் பள்ளி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். பள்ளி நேரத்தில் போக்குவரத்தை ஒழுங் குபடுத்துவதற்கு போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் அல்லது உரிய தடுப்பு அரண்களை அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வலியுறுத்தினர். காவல் துறையினர் உரிய நடவடிக் கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.