உதகை, ஜன.31- உதகை – எடக்காடு அருகே சாலையின் குறுக்கே தொங்கி கொண்டிருக்கும் ராட்சத கற்பூர மரத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் பல்வேறு இடங்களில் ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கற்பூர மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. குடியிருப்பு பகுதி கள், சாலையோரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அதி உயரத்தில் வளர்ந்துள்ளன. பருவமழை சமயங்களில் வீசும் சூறாவளி காற்றிற்கு தாக்குபிடிக்க முடியாமல் சாலையின் குறுக்காவோ, குடியிருப்புகள் மீதோ விழுந்து உயிரி ழப்புளை ஏற்படுத்துகின்றன. அபாயகரமான நிலையில், உள்ள மரங்கள் அவ்வப்போது அப்புறப்படுத்தப்படு கின்றன. கடந்த ஆண்டு பருவமழையின் போது உதகை மற்றும் குந்தா சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. இவை அகற்றப்பட்டன. இந்த சூழ லில் பிக்கட்டி சாலை சந்திப்பில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில் ராட்சத கற்பூர மரம் வேருடன் சாய்ந்து சாலை யின் குறுக்கே தொடங்கிய நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், எந்த நேரத்திலும் விழுந்து விபத்தை ஏற்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்த மரம் தொங்கிய நிலையிலேயே காட்சியளிக்கிறது. எனவே, இந்த மரத்தை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.