districts

நுகர்வோருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் நுழைவு வாயிலை மாற்றியமைக்க மன்றாடுகிறது

நாமக்கல், ஆக. 27- நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு நுகர்வோர்கள் எளிதாக செல்வதற்கு நுழைவு வாயிலை மாற்றி அமைக்க உயர்  நீதிமன்ற  தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனுவினை அளித்த னர். நாமக்கல் நுகர்வோர் நீதிமன் றம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மூன்று பக்கம் மட்டுமே சுற்றுச்சுவர் இருந்து வந் தது. ஒரு பக்க சுற்றுச்சுவர் இல்லா மல் நீதிமன்ற வளாகம் பாதுகாப்பு  இல்லாமல் இருந்தது. இதனைய டுத்து, சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ராஜேஷ்  குமார் எம்பி., வழங்கிய ரூ.6 லட்சத் தில் நுகர்வோர் நீதிமன்றத்தின் நான் காவது பக்கம் சுற்றுச்சுவர் கட்டப் பட்டது.  இந்நிலையில, நுகர்வோர் நீதி மன்றத்திற்கும் மாவட்ட நீதிமன்றத் திற்கும் இடையே இருந்த அரை  ஏக்கர் நிலமானது வழக்கறிஞர்க ளுக்கு அலுவலகங்கள் கட்ட ஒதுக் கப்பட்டதாகும். இந்த பகுதியில் ஆள் உயர முள் மரங்கள் வளர்ந்து பாம்புகள் நடமாட்டம் இருந்தது. இந்த பகுதியை மாவட்ட நுகர் வோர் ஆணையத்தின் வேண்டு கோளின்படி சமீபத்தில் மாநக ராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து  கொடுத்துள்ளது. பல மாவட்டங்க ளில் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற் குள் நுகர்வோர் நீதிமன்றம் செயல் படுகிறது. ஆனால், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று நேரடியாக நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு நுழைவாயில் இல்லை. இதனால்,  பொதுமக்களும் வழக்கறிஞர்க ளும் மருத்துவக் கல்லூரிக்கு செல் லும் சாலை வழியாக நுகர்வோர் நீதி மன்றத்திற்கு சுற்றி செல்கின்றனர். கிராமங்களில் இருந்து நுகர்வோர் நீதிமன்றத்துக்கு வருவோர் மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று  வழி தெரியாமல் தடுமாறுகின்றனர். இதனை தவிர்ப்பதற்காக திருச் செங்கோடு சாலை பிரிவிலி ருந்து நுகர்வோர் நீதிமன்றம் செல் லும் வரை   நான்கு வழிகாட்டும் பல கைகளை சமீபத்தில் நாமக்கல் குற் றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில் நுகர்வோர் நீதி  மன்றத்துக்கு பின்புற சுற்றுச்சுவரில்  மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவரின் முயற்சியால் புதிய  நுழைவாயில் அமைக்கப்பட்டுள் ளது. இதைப்போலவே மாவட்ட நீதி மன்ற வளாகத்திலும் பின்பக்கம் உள்ள ஒரு நுழைவாயிலை மாற்றி  நுகர்வோர் நீதிமன்றத்தில் அமைக் கப்பட்டுள்ள புதிய நுழைவாயி லுக்கு நேரெதிரில் அமைத்தால்  பொதுமக்களும் வழக்கறிஞர்க ளும் நெடுஞ்சாலையில் இருந்து  மாவட்ட நீதிமன்றம் வழியாக நேரடி யாக நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்து செல்ல இயலும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை நாமக் கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்கம்  சார்பில் வழக்கறிஞர் சங்க தலைவர்  டி. மோகன்ராஜ் வலியுறுத்தி பேசி னார். இதற்கான கோரிக்கையை மனுவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாரிடம் வழங் கப்பட்டது.  இதனிடையே, நெடுஞ்சாலை யில் இருந்து மாவட்ட நீதிமன்றம்  வழியாக நுகர்வோர் நீதிமன்றத் துக்கு வந்து செல்ல மாவட்ட நீதி மன்றத்தின் பின்பக்க சுற்றுச்சுவரில் உள்ள நுழைவாயிலை மாற்றி அமைத்து தருமாறு மாவட்ட நுகர் வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர்  வீ. ராமராஜ் மாவட்ட முதன்மை  நீதிபதியிடம் கடிதம் அளித்துள் ளார். மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த வழக்குகள்  நிலுவையில் இருந்து வந்த நாமக் கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 18 மாதங்களில் சுமார் 500  வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட் டது. தற்போது, 2023 ஆம் ஆண் டில் தாக்கல் செய்யப்பட்ட நுகர் வோர் வழக்குகள் மட்டுமே நிலுவை யில் உள்ளன. அதிக காலம் நிலு வையில் இருந்த வழக்குகள் கோயம்புத்தூரில் இருந்து நாமக் கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டு 143 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 36 வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து  வைத்துள்ளது. நுகர்வோர் நீதி மன்றங்களில் கடந்த ஆண்டு அதிக வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து  வைத்த நீதிமன்றமாக நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் சாதனை  படைத்துள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெடுஞ் சாலையில் இருந்து மாவட்ட நீதி மன்ற  வளாகம் வழியாக நுகர்வோர்  நீதிமன்றத்திற்கு வந்து செல்ல  வழியை  ஏற்படுத்தித் தர வேண்டும்  என்பதே பொதுமக்களின் கோரிக் கையாக உள்ளது.